வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி திடீரென்று எடுத்து செல்லப்படுகிறது: அகிலேஷ் யாதவ் பகீர்
லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அகிலேஷ் யாதவ்
இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விவரங்களுக்கு மாற்றம் செய்வதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

முறைகேடு என புகார்
அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற உள்ளதாகவும் அதனால் பாஜக பயப்படுவதாக கூறியுள்ள அகிலேஷ் ,ம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறையீடு செய்தனர் எனவும், வாரணாசி தேர்தல் அதிகாரி உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர் என்றார். இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் எனவும் அகிலேஷ் கூறியுள்ளார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்த வழியில் கொண்டு செல்லப்பட்டாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இது ஒரு திருட்டு போல எனக் கூறியுள்ளார். மேலும் நமது வாக்குகளை நானம் காப்பாற்ற வேண்டும் எனவும் இந்த முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம் ஆனால் அதற்கு முன் ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் மக்கள்முன் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் எனவும் கூறியுள்ளார்.

திடீர் பரபரப்பு
ஜனநாயகத்தை காப்பாற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு எனவும் அகிலேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு இடையே வாரணாசியின் பஹாரியா பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு வெளியே சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications