விடமாட்டோம்.. சுட்டுக் கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை சுமந்த ஸ்மிரிதி இராணி.. உருக்கமான வீடியோ!
உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் உடலை பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணி சுமந்து சென்றார்.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் உடலை பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணி சுமந்து சென்றார்.
நேற்று இரவு 11.30 மணிக்குஅமேதி தொகுதி பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் சுரேந்திர சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாருலியா கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே வைத்து இந்த கொலை நடந்துள்ளது.
சுரேந்திர சிங் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இவர் ஸ்மிரிதி இராணிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் ராகுல் காந்திற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை செய்து விமர்சனத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை
இது தொடர்பாக விசாரிக்க அமேதி போலீசார் தனிப்படை அமைத்து இருக்கிறார்கள். 2 பேர் சேர்ந்து சுரேந்திர சிங்கை துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளது.இந்த நிலையில் இவரின் இறுதிச் சடங்கில் அமேதி எம்.பி ஸ்மிரிதி இராணி கலந்து கொண்டார். சுரேந்திர சிங்கிங் குடும்பத்தாரிடம் ஆறுதலாக நீண்ட நேரம் ஸ்மிரிதி இராணி பேசினார்.

என்ன விசாரணை
அதன்பின் போலீசாரிடம் கொலை குறித்து விசாரித்தார்.அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், இந்த கொலை அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்து இருக்கிறது. இதற்கு பின் ஒரு குழு திட்டமிட்டு இயங்கி உள்ளது. அவர்களை சும்மா விடமாட்டோம். தனிப்படை அமைத்து போலீசை விசாரிக்க சொல்லி இருக்கிறோம்.

யார்
இது தொடர்பான விசாரணையை உடனே முடிக்க சொல்லி இருக்கிறேன். விரைவில் குற்றவாளிகள் எல்லோரும் பிடிபடுவார்கள் என்று கூறினார். அதன்பின் ஸ்மிரிதி இராணி இறுதி சடங்கில் சுரேந்தர் சிங்கின் உடலை தொட்டு வணங்கினார். அதன்பின் அவரின் உடலை சுமந்து சென்றார்.
|
மக்களுடன் மக்களாக
இடுகாட்டிற்கு பாதி தூரம் வரை அவரது உடலை ஸ்மிரிதி இராணி தூக்கிச் சென்றார். அதேபோல் முக்கிய இன்னும் சில பாஜக நிர்வாகிகளும் உடலை சுமந்து சென்றனர். இந்த உருக்கமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.












Click it and Unblock the Notifications