அகிலேஷ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நிலைக்கும்- சமாஜ்வாதி எம்எல்ஏ கடும் தாக்கு
லக்னோ: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நிலைக்கும் என சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ ஹரிம்யாதவ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை துடைத்தெறிய வேண்டும் என கட்சிகள் கங்கணம் கட்டி கொண்டு தேர்தல் கூட்டணியை அமைத்து வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதன்படி உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடவுள்ளனர். சிறிய கட்சிகளுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் ரே பரேலி, அமேதி தொகுதிகளில் வேட்பாளர்களை இரு கட்சிகளும் நிறுத்தவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்து ஹரிம் யாதவ் கூறுகையில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி பிரோசாபாத்தில் எடுபடாது. இந்த கூட்டணி இங்கு வெற்றி பெறாது.
மாயாவதி என்ன சொன்னாலும் அகிலேஷ் கேட்கிறார். எங்கள் தலைவர் மாயாவதி முன்னால் மண்டியிடும் வரை மட்டுமே இந்த கூட்டணி நிலைக்கும் என கூறினார்.












Click it and Unblock the Notifications