ஞானவாபி மசூதியில் இந்து பூஜை.. அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு! அடுத்து என்ன?
லக்னோ: ஞானவாபி மசூதி நிலத்தில் இந்துக்கள் வழிபட அனுமதியளித்த வாரணாசி நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற மறுத்து உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள இந்துக்களின் பிரசித்திபெற்ற புனித தளமான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதன் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் எழுப்பிய பழமையான ஞானவாபி மசூதி அமைந்து உள்ளது. நூற்றாண்டு பழமை கொண்ட இந்த மசூதி வளாகத்தின் வெளிச் சுவற்றுக்கு அருகே சிங்கார கவுரி அம்மன் சிலையும் இருந்து வருகிறது. இந்து - முஸ்லிம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக சொல்லப்பட்ட இந்த இடம் பிரச்சனைக்குரிய இடமாக மாறி உள்ளது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு பூஜை நடத்த அனுமதிகோரி பெண் பக்தர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை கடந்த 2022 ஆம் ஆண்டு விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் ஜாமியா கமிட்டி உச்சநீதிமன்றம் வரை சென்று பலன் கிடைக்கவில்லை. இதனை அடுத்து 3 நாட்கள் நடைபெற்ற ஆய்வில் மசூதியில் சிவலிங்கம் போன்ற ஒரு கல் இருப்பதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது.
அதன் பின்னர் சிவலிங்கம் போன்ற கல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால் மசூதி நிர்வாகமோ, கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் இல்லை, தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்யும் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரூற்று போன்ற அமைப்பு என விளக்கமளித்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தொல்லியல்துறை மசூதியில் செய்த அறிவியல்பூர்வ சர்வே முடிவுகளை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வாரணாசி நீதிமன்றமோ இந்து கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதா என்பதை உறுதிபடுத்துமாறு சொன்னது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதி அடிபாகத்தில் உள்ள சிவலிங்கம் எனப்படும் நீரூற்று உள்ள இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர உத்தரவிட்டார். இதனை அடுத்து 7 நாட்களில் பூஜை நடத்தப்படும் என இந்து பிரிவு அறிவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகி மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேசிவிட்டு விபரம் சொல்வதாக அவர் உறுதியளித்து இருக்கிறார். இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மசூதி நிர்வாகம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதாக உச்சநீதிமன்ற பதிவாளர் மசூதி நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications