மனசே உருகுது.. விங் கமாண்டர் பிருத்வி இறுதி சடங்கில்.. அப்பா தொப்பியை எடுத்து தலையில் வைத்த மகன்!
லக்னோ: நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் பயிற்சி மையம் அருகில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த பயங்கர விபத்தில் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
Salute from a son! Young son of IAF Wing Commander Prithvi Singh Chauhan salutes his father’s mortal remains after wearing his IAF cap during the final journey. The officer was pilot of the chopper which unfortunately crashed killing 13 onboard.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) December 11, 2021
pic.twitter.com/84Glzq9zSY

விங் கமாண்டர் உயிரிழப்பு
ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் என்பவரும் ஒருவர். இவரது சொந்த ஊர் உத்தரப்பிரதேசம் ஆகும். பிருத்வி சிங் சவுகான் இறப்பு செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் துடிதுடித்து போனார்கள். பிருத்வி சிங் சவுகானின் உடல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இறுதிச் சடங்கு
ஆக்ராவில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைப்பெற்றது. தேசியக் கொடி போர்த்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு வந்து வீர திருமகனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போதுதான் அங்கு நடந்த ஒரு நிகழ்வு ஏற்கனவே சோகத்தில் இருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

சல்யூட் அடித்த மகன்
விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியபோது அவரது இரண்டு குழந்தைகளும் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது விங் கமாண்டரின் 7 வயது மகன் தனது தந்தையின் உடலுக்கு குழந்தைகளுக்கே உரித்தான பாணியில் சல்யூட் அடித்தான்.

கண்கள் குளமாகியது
இதனை தொடர்ந்து ஏதுமறியா அந்த பாலகன் தந்தையின் உடலில் மேல் வைக்கப்பட்டு இருந்த அவர் பணியின்போது பயன்படுத்திய தொப்பியை தனது தலையில் வைத்தான். சிறுவனின் இந்த செயலை கண்டு அங்கு இருந்தவர்களின் கண்கள் மேலும் குளமாகியது. சிறு வயதில் தந்தையை இழந்து தவிக்கும் சிறுவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவது? என்று அங்கு இருந்தவர்கள் துடிதுடித்து போய் நின்றனர். சிறுவனின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications