அலி.. பஜ்ரங்கி பலியால் வந்த பிரச்சனை.. யோகி, மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. இதுதான் காரணம்!
லோக்சபா தேர்தலில் யோகி ஆதித்யநாத்திற்கும், மாயாவதிக்கும் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
லக்னோ: லோக்சபா தேர்தலில் யோகி ஆதித்யநாத்திற்கும், மாயாவதிக்கும் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்த மூன்று நாட்களுக்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அடுத்த இரண்டு நாட்களுக்கும் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. நாளை காலை 6 மணியில் இருந்து இந்த தடை அமலாகிறது.
இது இரண்டு கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தடைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

என்ன சொன்னார்
கடந்த வாரம் முன் மாயாவதி பிரச்சாரம் செய்த போது, இஸ்லாமியர்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தார். இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறக்கூடாது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணிதான் உங்களுக்கு நல்லது செய்யும் என்று குறிப்பிட்டார்.

என்ன பதில்
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் '' பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி இந்துக்கள் பக்கம் நிற்கவில்லை. அவர்கள் அலிகளின் (இஸ்லாமியர்கள்) பக்கம் நிற்கிறார்கள். நாம் பஜ்ரங்கி பலி (அனுமான்) பக்கம் நிற்கிறோம். நீங்களே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள், என்றார்.

இதுதான் சர்ச்சை
இதற்கு பதில் சொன்ன மாயாவதி, யோகி ஆதித்யநாத் மக்கள் மத்தியில் பிரிவை உண்டாக்க நினைக்கிறார். நான் மக்கள் பக்கம் இருக்கிறேன். எங்களுக்கு அலிகளும் வேண்டும். பஜ்ரங்கி பலிகளும் வேண்டும். எங்களுக்கு இருவருமே முக்கியம்தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

என்ன தடை
இதற்கு எதிராகத்தான் தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இந்து மற்றும் இஸ்லாமிய அடையாளங்களை இவர்கள் தவறாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்று கூறித்தான் தற்போதைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications