123 உயிர்களை பலி வாங்கிய ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்ச்சி! இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை!
லக்னோ: ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமான பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த துயர சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
உ.பியின் பிரபல சாமியாராக வலம் வருபவர்தான் போலோ பாபா. இவர் நேற்று முன்தினம் ஹத்ராஸ் நகரில் ஆன்மீக சொற்பொழிவை நடத்த திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக அறிவிப்பும் வெளியானது. இவரது உரையை கேட்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். ஆனால், இவ்வளவு பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இப்படி இருக்கையில் நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நெரிசலில் சிக்கிய பலர் திடீரென மயங்கி விழுந்தனர். ஆனால், அவர்களை மீட்காத சக பக்தர்கள் அவர்கள் மீது ஏறி நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து வெளியே வந்தனர். இதனால் 30 பேர் வரை உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேரம் செல்ல செல்ல இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது வரை இந்த விபத்தில் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை மோசமாக இருப்பதால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வரை உயிரிழந்தவர்களில் 118 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்திருக்கிறது. ஆனால் இன்னும் 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.
இந்த சம்பவத்தின் துயரம் ஒருபுறம் இருந்தாலும், காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று உ.பி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் வசதி இல்லை என்றும், மருத்துவமனை வளாகத்தில் பக்தர்களின் உடல்கள் குப்பைகளை போல போடப்பட்டிருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பிய நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரமதர் மோடி உட்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்து நடந்து 2 நாட்கள் ஆன பின்னரும் கூட தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டுமல்லாது காவல்துறை பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் நிகழ்ச்சி நடத்திய போலோ பாபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் பதிலளித்திருக்கிறார். "இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. காரணமானவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
ஆன்மீக நிகழ்ச்சிக்கு 80,000 பேர் கூடுவார்கள் என்றுதான் காவல்துறையில் அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியன்று சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் கூடியுள்ளனர். இதுதான் இந்த விபத்துக்கு அடிப்படை காரணமாகும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications