உ.பி.யில் சுட்டுக்கொல்லப்பட்ட போலீஸ்... ராஜஸ்தானில் இருந்து கொண்டு அறிக்கை கேட்கும் யோகி
உத்தர பிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் காவல் ஆய்வாளர் கொல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் கொல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேநேரம், உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் புல்சந்தர் அருகே உள்ள சயானா என்ற கிராமத்தில் 25- க்கும் மேற்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டியை வெட்டி குவித்து வைத்திருந்தனர். இதனை கண்ட கிராம மக்கள் , பசுக் காவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, கொல்லப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டியின் பாகங்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, புல்சந்தர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தை வன்முறையாக மாறியது. கூட்டத்தில் இருந்த கும்பல் ஒன்று போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், போலீசாரின் வாகனங்களுக்கு தீயை வைத்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போக, 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

பலி
கல்வீச்சில் புறக்காவல் நிலைய ஆய்வாளர் சுபோத் குமார் சிங் படுகாயம் அடைந்தார். அவரை சுற்றி வளைத்த கும்பல் ஒன்று, காருக்குள் கொண்டுச் சென்று சரமாரியாக சுட்டது. இதில், காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

இளைஞர் பலி
இதனையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த , போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குண்டு அடிப்பட்டு உயிரிழந்த இளைஞன் பெயர் சுமித் (18) என்பது விசாரணையில் தெரியவந்தது. அங்கு பதற்றமான சூழ்நிலை இருந்து வருவதால் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் குவிப்பு
புலந்த்சாகர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் நடத்தும் 3 நாள் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தக் கலவரம் வெடித்திருப்பதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது. போலீசார் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் உறுதி
இதற்கிடையே, ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இரு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும் படி, குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications