Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக அரசின் திட்டங்கள் மூலம் சாமானியர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்கானதுதான் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும், இந்த திட்டங்கள் மூலம் சாமானியர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பியின் 80 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது.

UP CM Yogi has said that the livelihood of the common people has improved through the schemes of the BJP government

இந்நிலையில், இன்று கோரக்நாத் கோவிலில் நடைபெற்ற ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் ஏழை எளிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், "உத்தரப் பிரதேச அரசுக்கு அனைத்து மக்களும் சமம்தான். யாருக்கும் இங்கு ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இப்படிதான் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட ரூ.6.90 லட்சம் கோடி மதிப்பிலா திட்டங்களும் இதன் அடிப்படையில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். அனைவருக்குமான வளர்ச்சி இருந்தால்தான் மாநிலத்தின் வளர்ச்சி சாத்தியமாகும். உத்தரப் பிரதேச அரசு சமீபத்திய பட்ஜெட்டில் கலாச்சாரம் பாதுகாப்பு, ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.

அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். ஒட்டுமொத்த சுகாதாரத்திற்கு ரூ.12,650 கோடியும், புதியதாக அமைய உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.2491 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல சாலை வசதிகளை மேம்படுத்தவும் பரவலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 60,397 கி.மீ சாலைகள் பள்ளங்களற்ற சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

14,144 கி.மீ சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே 2022-2023 நிதியாண்டில் மொத்தம் 60,397 கி.மீ நீளம் கொண்ட சாலைகள் பள்ளமற்றதாக மாற்றப்படும். அதேபோல சர்வதேச அளவில் இந்தியாதான் பால் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம்தான் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

எனவே பால் சங்கங்களை வலுப்படுத்தி, புத்துயிர் அளிக்கும் திட்டத்துக்கு ரூ.86.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 'நந்த் பாபா' பால் திட்டத்தை செயல்படுத்த ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி தொடங்கி வேளாண் வரை அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டுதான் பாஜக அரசு செயலாற்றி வருகிறது" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+