முதலீட்டாளர்களை பாதுகாப்பதே.. உபி அரசின் முக்கிய கடமை.. முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்கும் முதலீட்டாளர்களையும், அவர்களின் முதலீடுகளையும் பாதுகாப்பதே அரசின் முக்கியக் கடமை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கடந்த ஓராண்டாக புதிய புதிய தொழில் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் கால் பதித்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக, உபியில் உள்ள சில மாவட்டங்களை தொழிற்பேட்டைகளாக தரம் உயர்த்தும் நடவடிக்கையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கோரக்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இரும்பு தொழிற்சாலையை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு வரை (சமாஜ்வாதி ஆட்சிக்காலம்), புதிய தொழிற்சாலைகளையும், தொழில் நிறுவனங்களையும் தொடங்குவதற்கே முதலாளிகள் பயந்தனர். அப்படியே துணிச்சலாக தொழில் நிறுவனங்களை தொடங்கினாலும், சில கட்சிகளை சேர்ந்த ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டிய சூழல் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், அரசாங்கமும் தனது பங்குக்கு அந்த தொழில் நிறுவனங்களிடம் இருந்து வரி என்ற பெயரில் கோடிக்கணக்கிலான ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டிருந்தது. மேலும், தொழிற்சாலை முதலாளிகள் கடத்தப்படுவதும், மிரட்டப்படுவதுமான நிலை இருந்தது. இதனால் உபியில் இருந்து பல தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் வெளியேறின. ஆனால், உபியில் பாஜக ஆட்சி மலர்ந்ததில் இருந்து காட்சிகள் மாறின. ரவுடிகள் வேட்டையாடப்பட்டனர். சமூக விரோதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். அதனால் உபியில் சட்டம் ஒழுங்கு சீரானது.
உபியில் இனி தங்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற நம்பிக்கையின் பேரில், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும், நிறுவனங்களும் இங்கு வரத் தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடாகவே, அண்மையில் உபியில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.33.50 லட்சம் கோடியை நாம் ஈர்த்துள்ளோம். உபியில் அமையும் தொழில் நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் பெருமளவு விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது உபியில் தொழில் தொடங்க போட்டிப்போட்டு வருகின்றன. இதனால் உபி இளைஞர்களுக்கு இனி அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். முதலீட்டாளர்களையும், அவர்களின் முதலீடுகளையும் பாதுகாப்பதே தலையாயக் கடமையாக கொண்டு உபி அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications