ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றி ரூ. 1 கோடி சம்பாதித்தாரா.. சர்ச்சையில் ஆசிரியை.. விசாரணை
லக்னோவில் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா என்ற அரசு பள்ளி உள்ளது. இது மாநில அடிப்படைக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டேட்டாபேஸ் உருவாக்கப்பட்டது.
லக்னோவில் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா என்ற அரசு பள்ளி உள்ளது. இது மாநில அடிப்படைக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெளிப்படைத்தன்மைக்காக ஆசிரியர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு தளம் உருவாக்கப்பட்டது.
இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு ஆசிரியை 25 பள்ளிகளில் பணியாற்றி 13 மாதங்களில் ரூ 1 கோடி ஊதியத்தை பெற்றுள்ளது தெரியவந்தது.

பள்ளி ஆசிரியை
விசாரணையில் மயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. இவர் கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்தப் பள்ளியில் முழு நேரமாக பணியாற்றி வருகிறார். இவ்வாறிருக்கும் நிலையில் இவர் 25 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியையாக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளார்.

ஆசிரியை
அமேதி, அம்பேத்கார் நகர், ரே பரேலி, பிரயக்ராஜ், அலிகார் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பணியாற்றி வந்துள்ளார். இவர் டிஜிட்டல் தகவல் தளத்தில் இடம்பெற்றுள்ளதோடு 13 மாதங்கள், அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ரூ 1 கோடியை ஊதியமாக ஏமாற்றி பெற்றுள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து ஆசிரியைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கல்வித் துறை
எனினும் அவரிடம் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அவரது ஊதியம் உடனடியாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இவர் பணியாற்றிய அனைத்து பள்ளிகளிலும் ஒரே வங்கிக் கணக்கை பயன்படுத்தியுள்ளாரா என கல்வித் துறை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அடிப்படைக் கல்வித் துறை அமைச்சர் டாக்டர் சதீஷ் திவிவேதி செய்தியாளர்களை சந்தித்தார்.

வெளிப்படைத்தன்மை
அவர் கூறுகையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஆசிரியை அனாமிகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையெனில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக அந்த தகவல் தளத்தை டிஜிட்டல் டேட்டா பேஸை உருவாக்கினோம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications