சி.ஏ.ஏ. போராட்டம்: 130 போராட்டக்காரர்களுக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உ.பி. அரசு நோட்டீஸ்
லக்னோ: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுசொத்துகளை சேதப்படுத்தியதாக 130 பேருக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு உத்தரப்பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தின் போது உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோ, ராம்பூர், சம்பால், பிஜ்னோர் உள்ளிட்ட பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. பொதுசொத்துகள் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொதுசொத்துகளை சேதப்படுத்தியோர் என கண்டறியப்பட்டோரிடம் நஷ்ட ஈடு கேட்கும் நடவடிக்கையை உத்தரப்பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
ராம்பூரில் 28 பேர், சம்பாலில் 26 பேர், பிஜ்னோரில் 43 பேர், கோரக்பூரில் 33 பேர் என மொத்தம் 130 பேருக்கு ரூ50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் வீடியோக்கள், போட்டோக்கள் அடிப்படையில் போராட்டக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பொதுசொத்துக்களை நாசப்படுத்தியோரின் புகைப்படங்களையும் போலீசார் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இத்தகைய நோட்டீஸை பெற்ற பலரும் தாங்கள் போராட்டத்தில் பங்கேற்காத நிலையிலும் தங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது என கூறியுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications