2 குழந்தைக்கு மேல் போனால்.. வேலை கிடையாதா.. மானியமும் இல்லையா.. பின்னோக்கி போகும் உ.பி.!
2 குழந்தைகளை மேல் பெற்றுக்கூடாது என உபி அரசு உத்தரவிட்டுள்ளது
லக்னோ: 2 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ள வேண்டாம் என்று உபி முதல்வர் யோகி கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி மீறினால் அரசு வேலை கிடையாதாம்.. மான்யம் கிடையாதாம்.. சலுகை கிடையாதாம்.. தேர்தலில் போட்டியிட முடியாதாம்..!
உத்தரப்பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடக்க போகிறது.. இந்த தேர்தலுக்கு முன்னதாகவே, மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவுச் சட்டம் இயற்ற அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது..
அதன்படி, உபியில் குறைந்த அளவிலான வளங்கள் இருப்பதால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கு உதவ மக்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

சாராம்சம்
இந்த சட்டத்தின் முக்கிய சாராம்சங்கள் இதுதான்: மாநில அரசின் எல்லா நலத்திட்டங்களும் 2 குழந்தைகள் அல்லது அதற்கும் குறைவாக பெற்றுள்ள குடும்பத்துக்கு மட்டுமே சேரும்... 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசின் எந்த நலத்திட்டமும் கிடையாது... 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

மான்யம்
அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள்... 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.

முதலாளி
அதேபோல, இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு, முழு சேவையின் போது 2 கூடுதல் ஊதிய உயர்வுகள் கிடைக்கும்.. மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு சம்பளம், அலவனஸ், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் 3 சதவீதம் அதிகரிக்கும்... இதில், ஒரே குழந்தையுடன் நிறுத்தி கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும்..

குடும்ப கட்டுப்பாடு
மேலும், அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மகப்பேறு மையங்கள் நிறுவப்படும்.. இந்த மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவற்றை விநியோகிக்கும்... சமூக சுகாதார பணியாளர்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதோடு, மாநிலம் முழுவதும் கர்ப்பம், பிரசவம், பிறப்பு மற்றும் இறப்புகளை கட்டாயமாக பதிவு செய்வதை உறுதி செய்யும்... அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்" என்பன உள்ளிட்ட மசோதாக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

யோகி
இதுகுறித்து முதல்வர் யோகி சொல்லும்போது, இந்த சட்ட வரைவு மசோதாவினால் மக்களுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கக்கூடும்.. வறுமை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவை மக்கள் விரிவாக்கத்திற்கு முக்கிய காரணிகள்.. சில சமூகங்களில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு இல்லாமை உள்ளது.. அதனால், சமூகத்தை மையமாக கொண்ட விழிப்புணர்வு முயற்சிகள் தேவை என்பதனால் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications