காஷ்மீர் போல பற்றி எரியும் உபி சம்பல்: மசூதியில் ஆய்வு- போலீஸ் மீது கல்வீச்சு- துப்பாக்கிச் சூடு!
லக்னோ: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குவதும் பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் திருப்பித் தாக்குவதுமான காட்சிகளை சில ஆண்டுகளுக்கு முன்புவரை நாடு பார்த்திருந்தது... அதே போன்ற காட்சிகள் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உ.பி. சம்பல் பகுதியில் ஷாஜி ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
அயோத்தி பாபர் மசூதி போல வட இந்திய மாநிலங்களில் பல மசூதிகளை இந்துத்துவா அமைப்பினர் சர்ச்சைக்குரியதாக்கி வருகின்றனர். இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதுதான் உ.பி. சம்பல் ஷாஜி ஜமா மசூதி. இந்து கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது; இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் குழு ஒன்று சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றது. அவர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மசூதி பகுதியில் இன்று திரண்டு அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்கினர்; அரசு அதிகாரிகள் வந்த வாகனம் தீ வைத்தும் எரிக்கப்பட்டது. இதனால் சம்பல் ஷாஜி ஜமா மசூதி பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து போக அறிவுறுத்தல் விடுத்தனர். இதனை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; இதற்கு பதிலாக பொதுமக்கள் தரப்பில் இருந்து சரமாரியாக போலீசார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது; டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு வீதிகளில் வீசி எறியப்பட்டன. இதனால் சம்பல்ச ஷாஜி ஜமா மசூதி பெரும் போர்க்களமாக உருமாறியது. அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.

இதனையடுத்து அர்சு அதிகாரிகள் குழு மசூதிக்குள் சென்று நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வு நடத்தியது. கடந்த 19-ந் தேதி இதேபோல மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது மசூதி நிர்வாகத்தினர் உடனிருந்தனர். ஆனால் இன்று பெரும் வன்முறை வெடித்தது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications