அடுத்து யாரை கொலை பண்ணுவாங்களோ.. பசுக்காவலர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மகன் கண்ணீர்!
உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மகன் கண்ணீர் பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மகன் கண்ணீர் பேட்டி அளித்து இருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதியில் நேற்று இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அந்த பகுதியில் நேற்று பசுக்கொலை தொடர்பாக கலவரம் நடந்தது.
இதை கட்டுப்படுத்த சென்ற போது சுபோத் குமார் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குட்டி குடும்பம்
மிகவும் நேர்மையான அதிகாரியான சுபோத் குமார் இதற்கு முன்பே இப்படி சில முறை கலவரங்களில் சிக்கி இருக்கிறார். இவருக்கு மிக மோசமான காயங்கள் கூட ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இரண்டு மகன்களும் தற்போது கல்லூரி படித்து வருகிறார்கள்.

குடும்பம் கதறுகிறது
இவரின் குடும்பமே இந்த கொலை சம்பவம் கேட்டு கதறி அழுது வருகிறது. நேற்று மீரட் மருத்துவமனைக்கு வந்த சுபோத் குமாரின் குடும்பம் கதறி அழுத காட்சி பலரை உருக்கியது. அங்கிருந்த சில போலீசார் கூட இந்த காட்சியை பார்த்து கண்ணீர்விட்டு இருக்கிறார்கள்.

அப்பா அப்படி
சுபோத் குமாரின் மகன் அபிஷேக் இதுகுறித்து பேட்டியளித்தார். அதில், என் அப்பா எப்போதும் என்னை நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்று கூறுவார். மிகவும் கறாரான மனிதர் அவர். கண்டிப்புடன் நடந்து கொள்வார். அவருக்கு இந்தியா என்றால் மிகவும் பிடிக்கும். இப்படி இந்த மோசமான கலவரம் காரணமாக அப்பாவை இழந்துவிட்டேன், அடுத்து யாருடைய அப்பாவை அவர்கள் கொலை செய்ய போகிறார்களோ'' என்று கோபமாக கேட்டு இருக்கிறார்.

நல்ல போலீஸ்
இதுகுறித்து மீரட் ஏடிஜி பேட்டியளித்துள்ளார். அதில், நாங்கள் மிகச்சிறந்த போலீஸ் ஒருவரை இழந்துவிட்டோம். இதில் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக பிடிப்பதே எங்கள் வேலை. இதில் எல்லோருக்கும் தண்டனை வாங்கி கொடுப்போம். இதற்காக பெரிய விசாரணை குழு அமைக்க இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications