Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21 வயது பெண்ணை சுட்டு கொன்ற விவகாரம்! இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை எடுத்து போலீஸை சுட்ட உ.பி. இளைஞர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஆற்றில் வீசிய ஆடைகள், கால்வாயில் மறைத்த நம்பர் பிளேட் ஆகியவற்றை அடையாளம் காட்ட அழைத்து செல்லப்பட்ட ராஜீ, திடீரென இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை பறித்து அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் பரபரப்பு எழுந்தது.

உத்தரப்பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி திங்கள்கிழமை தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டனர்.

UP Woman shot dead accused snatched inspector pistol and fired

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு பலியாகிவிட்டார். இந்த பெண்ணை இருவரும் சுட்ட போதே அங்கிருந்த பொதுமக்கள் யாரும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது.

இந்த துப்பாக்கிச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. அந்த பெண்ணை இரு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதும் அவர் வலியால் துடித்து சரிந்து விழுந்தார். உடனே அந்த இரு இளைஞர்களும் துப்பாக்கியை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போதாவது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்திருக்கலாம்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிதறி கிடந்த அவரது பொருட்களில் இருந்த ஐடி கார்டை வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணின் பெயர் ரோஷினி என்பது தெரியவந்தது. ரோஷினிக்கு தெரிந்த நபர்கள்தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்க முடியும் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ராஜீ என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணுடன் தான் காதலில் இருந்து வந்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தன்னை அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், ரோஷினியை சமாதானப்படுத்த அவருடன் பேச முயற்சித்தார். ஆனால் அந்த பெண்ணோ பேச மறுத்துள்ளார்.

சம்பவத்தினத்தன்று கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வந்த அந்த பெண்ணை வழிமறித்து ராஜீ பேச முயற்சித்தார். ஆனால் அந்த பெண் மீண்டும் பேச மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜீ தன்னிடம் இருந்த துப்பாக்கியை வைத்து அந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் தன்னை போலீஸார் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை கழற்றி கால்வாயின் அடியில் வைத்தாராம். அது போல் அவருடைய துணிகளை மோப்ப நாய் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக பேத்வா ஆற்றில் வீசினாராம். இதையடுத்து மேற்கண்ட இடங்களுக்கு போலீஸார் ராஜீவை அழைத்து சென்றனர்.

அங்கு அவர் மறைத்த நம்பர் பிளேட்டையும் ஆற்றில் வீசிய துணியையும் பறிமுதல் செய்தனர். அப்போது திடீரென ராஜீ, இன்ஸ்பெக்டரிடம் இருந்த துப்பாக்கியை பறித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் எத்தனை முறை கேட்டும் அவர் துப்பாக்கியை கொடுக்கவில்லை. உடனே அந்த இன்ஸ்பெக்டர் மீது சுட்டார். இதில் அவர் காயமடைந்தார். உடனே போலீஸார் தற்காப்புக்காக தப்பியோட முயன்ற ராஜீயின் காலில் சுட்டனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+