Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி: காங், சமாஜ்வாதி கோட்டைகளான அமேதி, ரேபரேலி, மெயின்புரி பாஜக வசம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ளது பா.ஜ.க. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி, அமேதி, மெயின்புரி அத்தனையும் இப்போது பாஜக வசமாகிவிட்டது.

உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த அதிருப்தியை சமாளிக்க பாஜக படுதீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான மாவட்ட தலைவர் எனப்படும் ஜில்லா பஞ்சாயத்து தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 75 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவில்லை.

அமோக வெற்றி பெற்ற பாஜக

அமோக வெற்றி பெற்ற பாஜக


பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் நின்றன. சில இடங்களில் காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் பொதுவேட்பாளர்களை நிறுத்தின. ஆனால் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியும் மொத்தம் 67 இடங்களைக் கைப்பற்றி உள்ளன. சமாஜ்வாதி கட்சிக்கு 5 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

கோட்டையை பறிகொடுத்த எஸ்.பி

கோட்டையை பறிகொடுத்த எஸ்.பி

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சொந்த லோக்சபா தொகுதி மெயின்புரி. கடந்த 30 ஆண்டுகளாக ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவி சமாஜ்வாதி கட்சி வசம்தான் இருந்தது. ஆனால் இம்முறை சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான மெயின்புரியை பாஜக கைப்பற்றிவிட்டது.

ரேபரேலி, அமேதி

ரேபரேலி, அமேதி

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகள் அமேதி, ரேபரேலி. நேரு குடும்பத்தின் கோட்டையாக திகழ்ந்த இந்த இடங்களும் இப்போது பாஜக வசமாகிவிட்டன. இத்தனைக்கும் அமேதியில் சமாஜ்வாதிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் ஆதரவு தெரிவித்தது. ஆனாலும் சமாஜ்வாதி கட்சியால் வெல்ல முடியாமல் போனது.

பாஜக மீது புகார்

பாஜக மீது புகார்

சமாஜ்வாதி கட்சி வலிமையாக இருக்கக் கூடிய கன்னோஜ், ஃபிரோசாபாத் ஆகிய இடங்களும் கூட பாஜகவின் பிடியில் சிக்கி உள்ளன. ஆனால் உ.பி.யில் ஆளும் பாஜக அரசுதான் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு இத்தகைய வெற்றியை பெற்றுள்ளதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரியங்காவுக்கு பின்னடைவு

பிரியங்காவுக்கு பின்னடைவு

இன்னொருபுறம் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்கும் வகையில் பிரியங்கா காந்திதான் பொறுப்பாளராக இருக்கிறார். இது பிரியங்கா காந்திக்கு மிகப் பெரிய தோல்வியாக் கருதப்படுகிறது. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜக, பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+