Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கர ஷாக்.. கிரிக்கெட் விளையாடிய பின் கூலிங் வாட்டர் குடித்த மாணவன் சுருண்டு விழுந்து பலி! பின்னணி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: வெயிலில் கிரிக்கெட் விளையாடிவிட்டு கூலிங் தண்ணீரை குடித்த 10ம் வகுப்பு மாணவர் அப்படியே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த ஷாக் தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய சூழலில் மரணம் என்பது வெவ்வேறு ரூபங்களில் மனிதர்களுக்கு வருகிறது. பரோட்டோ, ஷவர்மா, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு கூட சிலர் இறக்கும் செய்திகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

Uttar Pradesh 10th student died after playing cricket and drinks cooling water

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் தான் தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. கிரிக்கெட் விளையாடிவிட்டு கூலிங் வாட்டரை குடித்த 10ம் வகுப்பு மாணவனின் உயிர் போய் உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விபரம் வருமாறு:

உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டம் ஹாசன்பூரில் உள்ள காயஸ்தான் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் சாய்னி. இவருக்கு வயது 17. 10ம்வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கிரிக்கெட் என்றால் அதிக பிரியம். இதனால் இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் முழுவதுமாக பார்த்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

அதோடு பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது தான் இவரது பொழுதுபோக்காகும். இந்நிலையில் தான் நேற்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறையையொட்டி பிரின்ஸ் சாய்னி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் செய்து அவர் விளையாடினார். ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவரும் விளையாட்டை முடித்தனர்.

Uttar Pradesh 10th student died after playing cricket and drinks cooling water

இந்த வேளையில் தாகம் அதிகமாக இருந்தததால் பிரின்ஸ் சாய்னி கூலிங் தண்ணீரை எடுத்து குடித்தார். இதையடுத்து அவர் திடீரென்று மயங்கினார். பேச்சு மூச்சின்றி அவர் மயங்கிய நிலையில் நண்பர்கள் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பிரின்ஸ் சாய்னியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரின்ஸ் சாய்னியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். இருப்பினும் பிரின்ஸ் சாய்னியின் சாவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. கிரிக்கெட் விளையாடி முடித்து கூலிங் தண்ணீரை குடித்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அது உறுதி செய்யப்படவில்லை. இதுபற்றி போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+