Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி தேர்தல்: முதல்முறை களமிறங்கிய ஆதித்யநாத்.. கோரக்பூரில் இன்று வாக்குப்பதிவு.. விறுவிறுப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பாக முதல்வர் ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

உத்தர பிரதேசத்தில் இன்று 6ம் கட்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 292 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கும். இது போக மீதம் உள்ள 54 தொகுதிகளில் அடுத்த கட்டத்தில் தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரக்பூர்

கோரக்பூர்

இந்த முறை கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் எம்பியாக இருந்துள்ளார். சட்ட மேலவை மூலமாக எம்எல்ஏ ஆகி இருக்கிறார். ஆனால் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏ ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோரக்பூர் தொகுதி ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கும் தொகுதியாகும்.

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

இங்கு கடந்த 70 வருடமாக ஜனசங்க காலத்தில் இருந்து பாஜக தோல்வி அடைந்ததே இல்லை. ஐந்து முறை கோரக்பூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றிபெற்று ஆதித்யநாத் லோக்சபாவிற்கு சென்றுள்ளார். இவர் முதலில் அயோத்தி தொகுதியில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அயோத்தியில் பாஜக அவ்வளவு வலிமை இல்லை என்று செய்திகள் வந்தன. உள்ளாட்சி தேர்தலிலும் அங்கு பாஜக தோல்வி அடைந்தது. எனவே ரிஸ்க் எதுவும் எடுக்காமல்.. வலுவான கோரக்பூர் தொகுதியை ஆதித்யநாத் தேர்வு செய்து இருக்கிறார்.

சமாஜ்வாதி

சமாஜ்வாதி

சமாஜ்வாதி சார்பாக இங்கு சுபாவதி சுக்லா என்ற பெண் போட்டியிடுகிறார். இவர் பிரமாண சமூகத்தை சேர்ந்தவர். இங்கு பிராமணர்கள் வாக்கு அதிகம் உள்ளது. அதனால் சமாஜ்வாதி இவரை களமிறக்கி உள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்கள், இடைநிலை சாதியினர், தலித் மக்களின் வாக்குகளும் இங்கு கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

 மவுரியா போட்டி

மவுரியா போட்டி

இன்னொரு பக்கம் சமாஜ்வாதி சார்பாக இன்று சுவாமி பிரசாத் மவுரியா போட்டியிடும் பாசில்நகர் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது. இவர் முன்னாள் பாஜக நிர்வாகி, அதேபோல் முன்னாள் அமைச்சர். வலிமையான ஓபிசி பிரிவு தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று இவரின் தொகுதியிலும் தேர்தல் நடக்க உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+