பத்திரப் பதிவு கட்டணத்தில் அதிரடி மாற்றம்! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சூப்பர் அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநில குடிமக்கள் தங்கள் சொத்துக்களை ரத்த சொந்தங்களுக்கு பரிமாற்ற வெறும் ரூ.5,000 செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் வரை யாரும் முதலமைச்சராக தொடர்ந்ததில்லை. ஆனால், யோகி ஆதித்யநாத் இதை முறியடித்துள்ளார். தற்போது 7வது ஆண்டாக அவர் முதலமைச்சராக நீடித்து வருகிறார். இதனை கொண்டாடும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் ஒன்றுதான் பத்திரப்பதிவு திட்டம்.

இந்த திட்டம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள், தங்கள் ரத்த சொந்த உறவினருக்கு சொத்தை மாற்ற வேண்டும் எனில் வெறும் ரூ.5,000 பதிவு கட்டணம் செலுத்தினால் போதுமானது. எவ்வளவு மதிப்புள்ள சொத்தாக இருந்தாலும் அதை மாற்ற இந்த சிறிய தொகை போதுமானதாகும். முன்னதாக இப்படி பதிவு செய்ய வேண்டும் எனில், சொத்தின் மதிப்பில் 7 சதவிகிதத்தை கொடுக்க வேண்டும். அதாவது ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை மாற்ற வேண்டும் எனில் ரூ.7 லட்சம் பதிவு கட்டணமான செலுத்த வேண்டும்.
இந்த திட்டம் குறித்து ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அம்மாநில மக்களிடையே இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே இதனை நீடிப்பதாக தற்போது அம்மாநிலத்தின் நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பயனர்கள் பயனடைந்துள்ளனர். எனவே இதனை நீடிக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
இதற்கு முந்தைய அரசாங்கங்கள் மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. சாமானிய மக்களுக்காக எந்த திட்டங்களையும் கடந்த அரசுகள் நிறைவேற்றவில்லை. பாஜகதான் மக்களின் கவலைகளை கணக்கில் கொண்டு சிறப்பான திட்டங்களை இயற்றி வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications