பட்டப்பகலில்.. மக்கள் கண் முன்னே சுடப்பட்ட 21 வயது தலித் பெண்.. உத்தர பிரதேச ஷாக்.. காரணம் என்ன?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தலித் மாணவி ஒருவர் சாலையில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் கேஸ்கள் உள்ளன. அவர் எம்பியாக இருந்தவர் என்றாலும் அரசியல் தாதா என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு துப்பாக்கி சூடு: உத்தர பிரதேசத்தில் அடிக் கொலை செய்யப்பட்டதன் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் அங்கே நேற்று தலித் மாணவி ஒருவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தில் இருக்கும் எய்ட் என்ற நகரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

அங்கே இருக்கும் ராம் லகான் படேல் மகாவித்யாலயா என்ற கல்லூரியில் படித்து வந்தார் ரோஷினி அஹிர்வர். 21 வயதான இவர் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார்.
எய்ட் சாலையில் சென்று கொண்டு இருந்த ரோஷினியை இரண்டு பேர் பைக்கில் பின் தொடர்ந்து உள்ளனர். பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த அவர்கள்.. நாட்டு துப்பாக்கி ஒன்றால் அந்த மாணவியை சரமாரியாக சுட்டுக்கொன்று உள்ளனர்.
காலை 11 மணிக்கு இந்த சம்பவம் பொதுமக்கள் முன்னிலையில் நடந்து உள்ளது. ரோஷினியை சுட்டுவிட்டு அங்கேயே துப்பாக்கியை போட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடினார்கள். அங்கே இருந்த மக்கள் வேடிக்கை பார்த்த நிலையில் அந்த மாணவியை துப்பாக்கி தோட்டாக்கள் சுட்டதை உறுதி செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்று உள்ளனர் இரண்டு இளைஞர்களும்.
ராஜ் அஹிர்வர் என்ற இளைஞர் மீது அந்த மாணவியின் பெற்றோ புகார் கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கே கிடந்த துப்பாக்கியும் ஆதாரமாக எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டு சாலையில் கிடைக்கும் புகைப்படங்கள் இணையம் முழுக்க பரவி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் என்ன? ராஜ் அஹிர்வர் ரோஷினியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை ரோஷினி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பல நாட்களாக ரோஷினி பின் அவர் சுற்றி இருக்கிறார்.
இறுதியில் ரோஷினி முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் ராஜ் ரோஷினியை கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் உண்மையான காரணம் இன்னும் தெரியாததால் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நிலையத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தூரத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டதாக மக்களும், எதிர்க்கட்சிகளும் புகார் அளித்து வரும் நிலையில்தான் இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்து உள்ளது.
-
கோவை சாய்பாபா காலனியில் திவ்யா போட்ட ஆட்டம்.. மகன் மீது ஈவிரக்கம் இல்லையா? ஆண் நண்பருக்காக இப்படியா? -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications