பேய் இருக்கா? இல்லையா? 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழும் ஆண்.. காரணத்தை கேட்டா அதிர்ந்து போவீங்க!
லக்னோ: உத்தர பிரதேசத்தில 3 திருமணம் செய்த ஆண் ஒருவர் 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இதன் பின்னணியில் பேய் பற்றிய பயம் தான் காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்வி நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் இனி எப்போதும் வரமாட்டார் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதேவேளையில் இன்னொரு தரப்போ, ஒருவர் இறந்துவிட்டால் அவர் நேசித்த மனிதர்களை காண இறந்த நபரின் ஆன்மா வந்து செல்லும் என்கின்றனர். அதோடு பேய் என்பது இருப்பதாக சிலர் கதைகளை கூறி வருகின்றனர்.
இதனால் தான் இப்போது வரை பேய் இருக்கா? இல்லையா? என்பதற்கு விடை தெரியாமல் உள்ளது. இதற்கிடையே தான் பேய் பயத்தில் ஒருவர் கடந்த 36 ஆண்டுகளாக ஆண் ஒருவர் பெண்ணாக மாறி வாழ்ந்து வரும் செய்தி வெளியாகி உள்ளது. அந்த நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் சிந்தா. இவர் தான் கடந்த 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இவர் 3 திருமணங்கள் செய்தார். மொத்தம் 9 மகன்கள் பிறந்தனர். இதில் 7 பேர் இறந்துவிட்டனர். 2வது மனைவியும் இறந்துவிட்டார். 2வது மனைவி இறந்த பிறகு சிந்தா பெண் போல் ஆடைகள் அணிய தொடங்கினார்.
அதாவது சிந்தா கையில் வளையல், திருமணம் ஆன பெண் போல் நெற்றியில் குங்குமம், கழுத்தில் பெண்கள் அணியும் ஆபரணங்கள், சேலை அணிந்து நடமாடி வருகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இதுபற்றி சிந்தாவிடம் கேட்டபோது, ‛‛எனது 2வது மனைவி மறைந்துவிட்டார். அவரது மறைவுக்கு பிறகு தான் நான் இப்படி மாறினேன். அவரது ஆன்மா என் கனவில் வந்து தொல்லை தந்தது.
அந்த ஆன்மா என்னை பெண் போல் வாழ வேண்டும் என்று கூறியது. இதனால் தான் பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறேன். எனக்கு மொத்தம் 9 மகன்கள். இதில் 7 பேர் இறந்துவிட்டனர்'' என்றார். அதாவது இறந்த 2வது மனைவி கனவில் வந்து பெண் போல் வாழ வேண்டும் என்று கூறிய நிலையில் அதை செய்யாவிட்டால் இறந்து விடுவோமோ? என்ற எண்ணம் சிந்தாவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தான் அவர் கடந்த 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications