பெண்களுடன் உல்லாசம்.. எம்ஜிஆர் கால டெக்னிக்கில் 20 பேரை ஏமாற்றிய நபர்.. யார் இந்த தியாகி? ஷாக்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் எம்ஜிஆர் கால டெக்னிக்கை பயன்படுத்தி 4 மாநிலங்களை சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவரை விட்டு பிரிந்த பெண்களை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நபர் யார்? அவர் எப்படி பெண்களை ஏமாற்றினார்? என்பது பற்றிய போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நவ்சாத் தியாகி. இவர் மீது பெண் ஒருவர் நாகர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Uttar Pradesh man posed as cop and sexually exploit 20 women across several states

நவ்சாத் தியாகி போலீஸ் எனக்கூறி தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் நவ்சாத் தியாகியை பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது: நவ்சாத் தியாகி பல பெண்களை ஏமாற்றி உடலுறவு வைத்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக போலீஸ் கான்ஸ்டபிள் என்று கூறி கணவன்களை இழந்த பெண்கள் அல்லது கணவரை விட்டு பிரிந்த பெண்களை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களிடம் இருந்து ஆபாச போட்டோக்களை வாங்கி உள்ளார்.

நவ்சாத்தின் நண்பர், மத்திய பிரதேசத்தில் போலீசாக உள்ளார். அவரது உடையை அணிந்து போலீஸ் என்று தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். இதனால் பெண்கள் அவரை நம்பி உள்ளனர். பெண்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு அவர் அவர்களுடன் உறவு வைத்துள்ளார். இப்படியாக மொத்தம் 18 முதல்20 பெண்களை அவர் ஏமாற்றி உள்ளார். 10 பெண்களுடன் உடலுறவு வைத்துள்ளார்.

இவர் உத்தரபிரதேசத்தில் காசியாபாத், புலண்டசார், மதுரா, சாம்பல், முசாபர்நகர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பெண்களை ஏமாற்றி உள்ளார். இதுதவிர டெல்லி, அசாம், மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்களையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். கைதான நவ்சாத் தியாகி 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். போலீஸ் துறையுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை'' என்றனர்.

இதுதொடர்பாக முசாபர்நகர் சீனியர் எஸ்பி சஞ்சய் குமார் வர்மா கூறுகையில், ‛‛ கைதான நபர் போலீஸ் உடை அணிந்து பெண்களை ஏமாற்றி உள்ளார். முதலில் நண்பர் போல் பழகி அதன்பிறகு அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் சில போலீசாருடன் அவர் வேண்டும் என்றே நெருக்கமாக பழகி உள்ளார். ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவதை போட்டோவாக எடுத்து பெண்களை ஏமாற்ற அதனை பயன்படுத்தி உள்ளார். இவர் தனியாக வாழும் பெண்களை குறிவைத்து ஏமாற்றி உள்ளார்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+