உத்தர பிரதேசத்திற்கு புதிய தலைவர்.. பாஜக களமிறக்கிய மூத்த அமைச்சர்.. 2024 தேர்தலுக்கு வியூகம்?
உத்தர பிரதேசத்திற்கு புதிய தலைவர்.. பாஜக களமிறக்கிய மூத்த அமைச்சர்.. 2024 தேர்தலுக்கு வியூகம்?
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மாநில பாஜகவின் புதிய தலைவராக அமைச்சர் பூபேந்திர சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ஜாட் சமூகத்தின் தலைவராக இருக்கும் பூபேந்திர சவுத்ரி, நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த நிலையில் தற்போது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜாட் சமூகம் மாநிலம் முழுவதும் சுமார் 25 இடங்களில் செல்வாக்கு பெற்றுள்ள சமூகமாகும் இருக்கும் நிலையில் இந்த சமூகத்தை சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கவணிக்கத் தக்கதாக உள்ளது.
இதற்கு முன்னதாக தலைவராக பணியாற்றிய ஸ்வதந்தர் தேவ் சிங் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது பூபேந்திர சவுத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்
சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. ஆனால் கடந்த தேர்தலை விடவும் இந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் சற்று குறைந்து காணப்பட்டது. எனவே கட்சியை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக மேலிடம் முடிவெடுத்து சில மாற்றங்களை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு தற்போது மாநிலத்தின் கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ளவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

செல்வாக்கு
அதன்படி, ஏற்கெனவே தலைவராக இருந்த ஸ்வதந்தர் தேவ் சிங்கிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டு தற்போது அமைச்சராக இருக்கும் பூபேந்திர சவுத்ரி கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாட் சமூகத்தின் தலைவராக இருக்கும் பூபேந்திர சவுத்ரி, நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த நிலையில் தற்போது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜாட் சமூகம் மாநிலம் முழுவதும் சுமார் 25 இடங்களில் செல்வாக்கு பெற்றுள்ள சமூகமாகும்.

மூன்றாவது மாநிலம்
முதலமைச்சர் ஆதித்யநாத் கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சவுத்ரியை கட்சியின் மாநிலத் தலைவராக நியமிப்பதன் மூலம் பிராந்திய சமநிலையை பாஜக எதிர்பார்க்கிறது. இவ்வாறு ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் கட்சியின் தலைவர்களாக நியமிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஹரியானாவில் ஓபி தங்கர் மற்றும் ராஜஸ்தானில் சதீஷ் பூனியா ஆகியோர் கட்சியின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாட் சமூகத்தின் தலைவர்களாவார்கள்.

தகவல்
கடந்த 2016ல் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் வரை அவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக பணியாற்றியுள்ளார். பாஜக அடிக்கடி சொல்வதைப்போல 'டபுள் இன்ஜின்' அரசாங்கம் மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் உடனடியாக அமல்படுத்தி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதளவில் உதவும் என்கிற வாத்தின் அடிப்படையில் அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் அதை கொண்டு சேர்க்க இப்படியான அதிரடி மாற்றங்கள் இன்றியமையாதது என கட்சியின் உயர்மட்டக்குழு கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications