மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்பப் பார்த்தாலும் இளசுகள் கூட்டம்.. ரெய்டு விட்ட போலீஸ்.. சிக்கிய காம மசாஜ் கூட்டம்.. 3 பேர் கைது!

மதுரையில் மசாஜ் சென்டர் நடத்திய 3 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியில் தொழில் செய்தவர்கள் கைது- வீடியோ

    மதுரை: மசாஜ் சென்டர் என்ற பெயரில் ஆட்டம் போட்டு கொண்டிருந்த 3 பேரை மதுரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

    திடீர் நகர் பகுதியில் ரூபி பெயரில் ஒரு தனியார் மசாஜ் சென்டர் நடந்து வருகிறது. இதன் ஓனர் ராஜ்குமார் என்பவர். இவருடைய சொந்த ஊர் கீரைத்துறை. அந்த ஏரியாவிலேயே ரொம்ப ஃபேமஸ் ஆன மசாஜ் சென்டர் இது. அதனால் எக்கச்சக்கமானோர் இங்கு வந்து செல்வார்கள். ஆனால் அதிக அளவில் வருவது 25 வயதுக்கு குறைவான ஆண்கள்தான்.

    [ எதா இருந்தாலும் சரி.. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டுதான்.. சித்தார்த்துக்கு! ]

     ரகசிய தகவல்

    ரகசிய தகவல்

    இதை திடீர் நகர் பகுதி மக்கள் கவனித்தனர். ஒரு மசாஜ் சென்டர் என்றால் எல்லா தரப்பு வயதிலும்தானே கஸ்டமர்கள் வருவார்கள், ஆனால் இங்கு மட்டும் ஏன் வெறும் இளைஞர்கள் வருகிறார்கள் என்று சந்தேகப்பட்டனர். அதனால் பாலியல் தொழில் ஏதேனும் நடக்கிறதா என்பதை கண்காணியுங்கள் என்று பொதுமக்களில் சிலரே போலீசாருக்கு ரகசிய தகவல் தந்தனர்.

     வெளிமாநில 6 பெண்கள்

    வெளிமாநில 6 பெண்கள்

    இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்தார்கள். அப்போது ஓனர் ராஜ்குமார், 6 பெண்களை அந்த மசாஜ் சென்டரில் வைத்து பாலியல் தொழில் செய்தது உறுதியானது. இந்த பெண்கள் எல்லாருமே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வறுமையில் வாடியதால் பிழைப்புக்காக இந்த தொழிலில் ராஜ்குமார் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

     காமிரா பறிமுதல்

    காமிரா பறிமுதல்

    இதையடுத்து, அந்த சென்டரில் மேலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பெண்களை வைத்து ராஜ்குமார் ஆபாசப்படம் எடுக்கப் பயன்படும் காமிரா, ஏடிஎம் ஸ்வைப்பிங் மிஷின் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, ராஜ்குமாருடன் சேர்த்து மற்ற 2 பெண்கள் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

     பெண்கள் காப்பகம்

    பெண்கள் காப்பகம்

    பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட மற்ற பெண்கள் அரசு காப்பகத்தில் ஒப்பக்கப்பட்டனர். இந்த மசாஜ் சென்டருக்கு யார் யாரெல்லாம் வந்து போனார்கள், பாலியல் தொழிலில் வேறு ஏதேனும் பெண்கள் ராஜ்குமாரால் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

    English summary
    3 People arrested for running massage center as brothel in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X