தேனியில் அதிமுக ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் தரப்போறாங்க.. தங்கதமிழ் செல்வன் புலம்பல்
மதுரை: தேனி மக்களவை தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 வரை கொடுக்க அதிமுகவினர் திட்டமிட்டுளளதாக தேனி அமமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்
நேற்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்செல்வன், எதிர்க்கட்சிகளின் வீடுகளில் சோதனை செய்யும் வருமான வரித்துறை ஓபிஎஸ் வீட்டில் சோதனை மேற்கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.

மேலும் தனது மகன் ரவீந்திராத் போட்டியிடும் தேனி தொகுதிக்கு ரூ.1000 கோடி செலவு செய்யும் ஓபிஎஸ் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் தங்கதமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.
தேனி மக்களவை தொகுதியில் அதிமுகவினர், ஒரு ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் வரை பணம் கொடுக்க உள்ளதாக கூறிய தங்கதமிழ்செல்வன், பணத்தை போலீஸ் வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் தேனியில் பணப்பட்டுவாடா பகிரங்கமாகவே நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஒபிஎஸ்சின் தனிப்பட்ட கோரிக்கைக்காவே தேனியில் பிரதமர் மோடி வந்து பிரச்சாரம் செய்துள்ளதாக கூறி தங்கதமிழ்செல்வன், இந்த பிரச்சாரத்துக்கு அவர் ரூ.50 கோடி அளவுக்கு செலவு செய்திருப்பதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications