அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாகி விட்டது... சொல்கிறார் கருணாஸ்
Recommended Video
மதுரை: அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கருணாஸ். முக்குலத்தோர் புலிகள் படை அமைப்பின் தலைவரான கருணாஸ், அவ்வப்போது தடாலடியாக பேசி வருகிறார். அதனால், அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைப்பதாக கூறப்பட்டாலும், சிக்கலும் சேர்ந்தே வருகிறது.

இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அமைதியாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ ஒரு நிலையான அரசு வேண்டும் என பாஜகவுக்கு எதிராக கூறினார்.
5 ஆண்டு கால ஆட்சியில் பாஜக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என விமர்சித்த கருணாஸ், அதிமுக இரண்டாக பிரிந்தது அனைவருக்கும் சாதகமாக அமைந்துவிட்டது என்றார்.
இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்களின் மனநிலையை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதற்கு பதிலளித்த கருணாஸ், மக்கள் மத்தியில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் மீதான நம்பிக்கை குறைந்து விட்டதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications