திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூணா? நில அளவை கல்லா? தொல்லியல் துறையினர் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே வழக்கம்போல் இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு இருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் தானா இல்லை நில அளவை கல்லா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணை, தொல்லியல்துறையை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர். காலை 8.45 மணிக்கு இந்த ஆய்வு பணியானது தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு பணி நடந்தது. இதில் தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.













Click it and Unblock the Notifications