அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்களுக்கு தண்ணீர் காட்டிய காளை! ஓனர் விருமாண்டிக்கு சூப்பர் பரிசு!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறங்கிய காளைகளில் வீரர்களிடம் பிடிபடாமல் கெத்து காட்டிய காளைக்கு டிராக்டர் பரிசாக கிடைத்தது. இதை பெற்றுக் கொண்ட அதன் உரிமையாளர் விருமாண்டி தனது காளையின் வெற்றியை நெகிழ்ச்சியாக தெரிவித்தார். மேலும் தனது காலை அலங்காநல்லூரிலும் சீறிபாயும் என தெரிவித்தார்.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று ஏராளமான காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்தன. இதில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் கெத்து காட்டி சிறந்த காளை என்ற பெருமையை பெற்றது விருமாண்டியின் காளை.
இந்த காளை, மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட டிராக்டரை தனது உரிமையாளருக்கு பெற்றுக் கொடுத்தது. இந்த வெற்றி குறித்து விருமாண்டி கூறுகையில், இந்த ஆண்டு நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எனது காளை முதல் பரிசு வென்றதில் எனக்கு மகிழ்ச்சி. முதல்வர் சார்பில் வழங்கப்பட்ட டிராக்டரை எனது காளை எனக்கு பெற்றுத் தந்தது.
அவனியாபுரத்தில் டோக்கன் வாங்குவதற்கே நான் மிகவும் சிரமப்பட்டேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் காளை உரிமையாளர்கள் எளிதாக டோக்கன் பெற்றுக் கொள்ள தமிழக அரசு வழி செய்ய வேண்டும். இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாடுபிடி வீரராக முதல் பரிசு பெற்றிருந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
எனினும் எனது காளைக்கு அங்கீகாரம் கிடைத்தது திருப்தி அளிக்கிறது. அவனியாபுரத்தைத் தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் எனது காளையை இறக்க போகிறேன். அங்கும் என் காளை மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் வெற்றி வாகை சூடும் என தெரிவித்திருந்தார்.
அது போல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 937 காளைகள் வாடிவாசல் வழியாக திறந்துவிடப்பட்டன. இதில் 22 காளைகளை அடக்கி வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை பெற்றார்.
மேலும் 17 காளைகளின் திமிலை அடக்கி கார்த்திக் இரண்டாம் இடத்தையும் 16 காளைகளை அடக்கி ரஞ்சித் குமார் 3ஆவது பரிசையும் பெற்றார். கார்த்திக்கிற்கு பைக்கும், ரஞ்சித்குமாருக்கு தங்கக் காசுகளும் பரிசாக கொடுக்கப்பட்டன. இன்று நடந்த போட்டியில் காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள் என 57 பேர் காயமடைந்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications