"பிக் மெசேஜ்".. எடப்பாடி, ஓபிஎஸ்ஸை ஒன்றாக வரச்சொன்ன மோடி.. உத்தரவிற்கு பின் உள்ள "அந்த" காரணம்!
மதுரை: மிகப்பெரிய திருப்பமாக மதுரை வந்த பிரதமர் மோடியை இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர். இதன் மூலம் அதிமுகவிற்கு பிரதமர் மோடி முக்கியமான மெசேஜ் ஒன்றை கொடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பிரதமர் மோடி பெங்களூரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.
இதற்காக பெங்களூரில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார்.

வரவேற்பு
இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக வரவேற்றனர். திட்டப்படி எடப்பாடி பழனிசாமி மோடியை வரவேற்பதாக இருந்தது. மோடியை வழியனுப்ப ஓ பன்னீர்செல்வம் வருவதாக இருந்தது. ஆனால் மாற்றி மாற்றி நேரம் கொடுக்க முடியாது என்று பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்ததாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இரண்டு பேரும் ஒன்றாக வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படியே இரண்டு பேருமே தலா 10 பேருடன் மோடியை சந்திக்க இன்று மதுரை விமான நிலையத்திற்கு சென்றனர். மதுரை விமான நிலையத்தில் இரண்டு பேருமே தங்களுடன் வந்த 20 பேருடன் நின்றனர். மோடி வந்ததும் இவர்கள் உள்ளே செல்ல வேண்டும். அப்போது அதிகாரி ஒருவர் இவர்களை தடுத்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்
தலா 10 பேரை எல்லாம் அழைத்து செல்ல முடியாது. தலா 5 பேரை மட்டும் அழைத்து செல்லுங்கள் என்று கூறி உள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தன்னுடன் 5 பேரை அழைத்து சென்றார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் 5 பேரை அழைத்து சென்றார். உள்ளே சென்ற பின் விமான நிலையத்தில் இவர்கள் வரிசையாக நின்றுள்ளனர். இதனால் அங்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

என்ன நடந்தது?
இவர்களை பார்த்ததும் மோடி அருகில் வரும்படி கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இருவரையும் அருகில் வரும்படி கூறினார். இருவரிடமும் ஒரே நேரத்தில் மோடி அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் ஒன்றாக சென்று அடுத்தடுத்து பிரதமர் மோடியிடம் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்துள்ளனர். அதன்பின் அவர்களுடன் வந்த அதிமுக நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு வணக்கம் வைத்துள்ளனர்.

மெசேஜ்
இந்த சம்பவம் மூலம் அதிமுகவிற்கு மிக முக்கியமான மெசேஜ் ஒன்றை மோடி கொடுத்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதன்படி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இரண்டு பேரையும் நாங்கள் வேறு வேறாக பார்க்கவில்லை. இரண்டு பேரையும் ஒன்றாக பார்க்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். இரண்டு பேருமே எங்களுக்கு முக்கியம் என்பதை பாஜக அதிமுகவிற்கு சொல்லாமல் சொல்லி உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
-
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications