Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் ஓட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஓட்டல் உரிமையாளரிடம் போனில் மன்னிப்பு கேட்டுள்ளார். என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்.

இன்று(ஜூலை 28) 'என் மண் என் மக்கள்' என்ற கோஷத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். இந்த பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார் இதற்காக வியாழக்கிழமை (நேற்று) மதியம் அண்ணாமலை மதுரைக்கு வந்தார்.

BJP leader Annamalai apologizes to hotel owner in madurai due to missed lunch

மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நான்குவழிச்சாலையில் உள்ள டெம்பிள் சிட்டி ஓட்டலில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டி இருந்தது.

ஆனால் இதுகுறித்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ஓட்டல் முன்பு கட்சி கொடிகளுடன் காத்திருந்தவர்களை பார்த்துள்ளார். தன் வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கருதி அவர்களுக்கு 'சைகை' காட்டிவிட்டு திருப்புவனத்தை தாண்டிச் சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட பாஜக நிர்வாகிகள், மதிய உணவு குறித்து அவருக்கு தெரிவித்தனர். உடனடியாக ஓட்டல் உரிமையாளர் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அண்ணாமலை, 'ஸாரி அண்ணா. ஓட்டல் முன்பு கூட்டம் இருந்ததால் கடந்து சென்றுவிட்டேன். உடனடியாக 'U' டர்ன் செய்து ஓட்டலுக்கு வரமுடியவில்லை. அடுத்தமுறை கட்டாயம் வருகிறேன்' என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "ராமேஸ்வரத்தில் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (இன்று) தொடங்கி வைக்கிறார். இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும். ஜூலை 29-ல் யாத்திரை தொடங்கும்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் யாத்திரை போகிறோம். நாளை முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரை நடைபெறும். இந்த முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெற போகிறது. 1700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும். ஜன.11-க்குள் முன்பு யாத்திரை முடிக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+