மதுரையில் ஓட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. ஏன் தெரியுமா?
மதுரை: மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஓட்டல் உரிமையாளரிடம் போனில் மன்னிப்பு கேட்டுள்ளார். என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்.
இன்று(ஜூலை 28) 'என் மண் என் மக்கள்' என்ற கோஷத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை அண்ணாமலை தொடங்குகிறார். இந்த பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார் இதற்காக வியாழக்கிழமை (நேற்று) மதியம் அண்ணாமலை மதுரைக்கு வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நான்குவழிச்சாலையில் உள்ள டெம்பிள் சிட்டி ஓட்டலில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டி இருந்தது.
ஆனால் இதுகுறித்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ஓட்டல் முன்பு கட்சி கொடிகளுடன் காத்திருந்தவர்களை பார்த்துள்ளார். தன் வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கருதி அவர்களுக்கு 'சைகை' காட்டிவிட்டு திருப்புவனத்தை தாண்டிச் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட பாஜக நிர்வாகிகள், மதிய உணவு குறித்து அவருக்கு தெரிவித்தனர். உடனடியாக ஓட்டல் உரிமையாளர் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அண்ணாமலை, 'ஸாரி அண்ணா. ஓட்டல் முன்பு கூட்டம் இருந்ததால் கடந்து சென்றுவிட்டேன். உடனடியாக 'U' டர்ன் செய்து ஓட்டலுக்கு வரமுடியவில்லை. அடுத்தமுறை கட்டாயம் வருகிறேன்' என்று தெரிவித்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "ராமேஸ்வரத்தில் 'என் மண், என் மக்கள்' யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (இன்று) தொடங்கி வைக்கிறார். இன்று தொடக்க விழா மட்டுமே நடைபெறும். ஜூலை 29-ல் யாத்திரை தொடங்கும்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் யாத்திரை போகிறோம். நாளை முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் முதல் கட்ட யாத்திரை நடைபெறும். இந்த முதல் கட்ட யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மொத்தம் 5 கட்டங்களாக 168 நாட்கள் யாத்திரை நடைபெற போகிறது. 1700 கிலோ மீட்டர் கால்நடையாகவும், 900 கிலோ மீட்டர் வாகனத்திலும் யாத்திரை நடைபெறும். ஜன.11-க்குள் முன்பு யாத்திரை முடிக்கப்படும் என்றார்.
-
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம்












Click it and Unblock the Notifications