பிடிஆர் கார் மீது விழுந்த “சின்ட்ரெல்லா” செருப்பு.. வேட்டையை தொடங்கிய போலீஸ்! ஓடி ஒளிந்த பாஜக தலைகள்
மதுரை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் தாங்களும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தலைமறைவாகி இருக்கின்றனர்.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும்போது வீரமரணமடைந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்த பாஜகவினர் அவரது கார் மீது செருப்பை கொண்டு வீசினர். இந்த சம்பவத்தால் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் வழக்கு
அமைச்சர் கார் மீது பாஜகவினர் காலணி வீசியது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் பாஜக மாவட்டத் தலைவராக இருந்த சரவணனின் தூண்டுதலின்பேரிலேயே காலணி வீசப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

10 பேர் கைது
முதல் தகவல் அறிக்கையில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 10 பேரை போலீசார் கைது செய்த நிலையில், நள்ளிரவே சரவணன் பிடிஆரை சந்தித்து பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் அவரை போலீசார் கைது செய்யவில்லை. இந்த நிலையில் சரவணனையும் கைது செய்யக்கோரி மதுரை காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது.

போலீஸ் வலைவீச்சு
இதுவரை 10 பேர் கைதான நிலையில், புகைப்படங்கள், வீடியோக்களில் இடம்பெற்ற பாஜகவினரை கண்டறிந்து கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே விமான நிலையத்துக்கே செல்லாத தங்கள் கட்சியினரை எல்லாம் காவல்துறை கைது செய்வதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தலைமறைவு
இதன் காரணமாக அக்கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பலர் தாங்களும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எண்ணி தலைமறைவாகிவிட்டார்கள். இதுகுறித்து 2 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பாஜக நிர்வாகி ராஜரத்தினம் தெரிவிக்கையில், பாஜகவினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications