250 நாற்காலி மேடைக்கு வரணும்! ஃபாஸ்ட் ஃபாஸ்ட் ப்ளீஸ்! அதிமுக தொண்டர்களிடம் கெஞ்சிய சி.விஜயபாஸ்கர்!
மதுரை: அதிமுக மாநாடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விழா மேடையில் எடப்பாடி பழனிசாமியுடன் 250 நிர்வாகிகளை அமர வைக்கும் வகையில் நாற்காலிகள் போட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
அதிமுக மாநாட்டு பணிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு பார்த்ததில் சி.விஜயபாஸ்கரும் ஒருவர். கால்கோள் விழாவில் ஆரம்பித்து இன்றைய தினம் ஒருங்கிணைப்பு வரை அனைத்து வேலைகளையும் கவனித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் எடப்பாடி பழனிசாமி விழா மேடைக்கு வருகை தரவுள்ளார். (நீங்கள் இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் போது மாநாடு மேடைக்கு அவர் வந்திருக்கக் கூடும்). இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைப்பு நிர்வாகிகள் என 250 பேரை எடப்பாடி பழனிசாமியுடன் மேடையேற்றியிருக்கிறார் சி.விஜயபாஸ்கர்.
பிற்பகல் 3.30 மணி முதலே இதற்கான நாற்காலி அரேஞ்ச்மெண்ட் பணிகளை விஜயபாஸ்கர் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். விஐபி பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொண்டர்கள் அமர்ந்துகொண்டதால், அவர்களிடம் இருந்து கெஞ்சி அந்த நாற்காலிகளை வாங்கி மேடையில் போட்டார்.
பாசறை நண்பர்கள் தொண்டர்களிடம் இருந்து நாற்காலியை வாங்கிக்கொண்டு மேடைக்கு வாங்க ஃபாஸ்ட் ஃபாஸ்ட் ப்ளீஸ் என பரபரத்தார். இதனிடையே கூட்டம் லேசாக கலையத் தொடங்கியதை மேடையில் இருந்து பார்த்த விஜயபாஸ்கர், இன்னும் இரண்டு மணி நேரம் மட்டும் தான், தயவு செய்து எல்லோரும் பொறுமைக் காக்குமாறு கேட்டுக்கொண்டார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications