உதயநிதி தலைக்கு விலை வைத்த அயோத்தி சாமியார் மீது வழக்குப்பதிவு.. வீடியோ வெளியிட்டவர் மீதும் வழக்கு!
மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைச் சீவினால் ரூ.10 பரிசு அறிவித்த அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா மீது மதுரையில் திமுக வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவை பதிவிட்டு அவதூறு கருத்துகளைத் தெரிவித்தவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்" எனப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையைச் சீவினால் ரூ. 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியா அறிவித்தார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து அதை கொளுத்தியும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே, சனாதானம் குறித்து தவறாகப் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வட மாநிலங்கள் பலவற்றிலும் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா, உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், மதுரையில் திமுக வழக்கறிஞர் அணியினர், அயோத்தி சாமியார் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா மீது மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதானம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை அறிவித்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராமசந்திர தாஸ் பரமஹன்ஸ் ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட பியூஸ்ராய் ஆகிய இருவர் மீதும் 153, 153A (1)(a), 504, 505(1)(b), 505(2)& 506(ii) IPC 6 (கொலை மிரட்டல், பொது அமைதியை சீர் குலைத்தல், வகுப்புகள் இடையே பகை வளர்த்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications