Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முறைகேடு.. தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரம் அரசு ஆசிரியர் கைது.. சிபிஐ அதிரடி! என்னாச்சு?

2022 ம் ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் எப்போதும் பள்ளி மாணவர்கள் யூனிபார்ம்மை தான் ஆடையாக அணிந்து செல்வார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற இடைநிலை வகுப்பு ஆசிரியரான ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வருமான வரி தொடர்பான முறைகேடு புகாரில் சிக்கிய அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளை பாராட்டி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மொத்தம் 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வாகி இருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் கே ராமச்சந்திரன் மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானார்.

தேசிய நல்லாசிரியர் விருது

தேசிய நல்லாசிரியர் விருது

கொரோனா கால உதவி, போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி, students skills என்ற பெயரில் பள்ளிக்கு தனி யூடியூப் சேனல் தொடங்கி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர செய்தார். மேலும் பள்ளி மாணவர்களை போல் யூனிபார்ம் அணிந்து பள்ளிகளுக்கு செல்லும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டார். இந்த சேவையை பாராட்டி தான் அவருக்கு ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் இருந்து அவர் விருது பெற்றார். அப்போது கூட அவர் பள்ளியின் சீருடையிலேயே சென்று விருது பெற்று வியக்க வைத்தார்.

சிபிஐ அதிகாரிகள் கைது

சிபிஐ அதிகாரிகள் கைது

இந்நிலையில் தான் தற்போது ஆசிரியர் கே ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவரது சகோதரர் பஞ்சாட்சரத்தால் சிபிஐ அதிகாரிகளிடம் கே ராமச்சந்திரன் சிக்கி உள்ளார். பணமுறைகேடு தொடர்பான புகாரில் நேற்று ஆசிரியர் கே ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளது தெரியவந்தது. மதுரையில் விசாரணைக்கு ஆஜரான அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது நடவடிக்கை ஏன்?

கைது நடவடிக்கை ஏன்?

அதாவது ஆசிரியர் ராமச்சந்திரனின் சகோதரர் பெயர் பஞ்சாட்சரம். இவர் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் வருமான வரி தாக்கல் தொடர்பான விபரங்கள் மற்றும் வரி தாக்கல் செய்யும் பணி மேற்கொள்ளும் நிறுவனம் நிறுவனத்தை நடத்துகிறார். இவர் Income tax e file மூலம் நிறையபேருக்கு குறைவான கணக்கு காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 2.84 கோடி வரை முறைகேடாக வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப பெற்று கொடுத்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமான வரி வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து 2021ல் பஞ்சாட்சரத்துக்கு எதிராக புகார் சென்றது. சிபிஐ அதிகாரிகள் விசாரித்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் வந்த நிலையில் அவரது பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ரூ.12 லட்சம் பணப்பரிமாற்றம்

ரூ.12 லட்சம் பணப்பரிமாற்றம்

இந்நிலையில் தான் பஞ்சாட்சரத்திடம் இருந்து ஆசிரியர் ராமச்சந்திரன் வங்கி கணக்கில் ரூ.12 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து தான் ஆசிரியர் ராமச்சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படும் நிலையில் கூட்டு சதி செய்ததாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரை மதுரையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+