2026-க்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்படி கட்டி முடிப்பீர்கள்?.. உயர்நீதிமன்றம் மதுரை கிளை
மதுரை: 2026 ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையை எப்படி கட்டி முடிப்பீர்கள் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கே. கே. ரமேஷ் என்பவர் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக நடத்தி கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

36 மாதங்கள்
அந்த வழக்கு விசாரணையில் 36 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. தற்போது வரை அதற்கான எந்தக் கட்டுமான பணிகளும் தொடங்காத நிலையில் நீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதியை மீறிய சுகாதாரத் துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணை
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக நீதிபதிகள் ரமேஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு முன் வைத்த வாதத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக ரூ 1977 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் 8 மாதங்கள்
இதை கட்டுவதற்கு 5 ஆண்டுகள் 8 மாத காலமாகும். அதாவது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணிகள் முடிக்கப்படும். எனவே இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து 2026 அக்டோபரில் எப்படி மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

மதுரை தோப்பூர்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் செப்டம்பர் 2022 ஆம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தென்காசியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா கேட்ட போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பதில் அளிக்கையில் கட்டுமானப் பணி எப்போது தொடங்கும் தேதி சம்பந்தமான தகவல்கள் இல்லை என கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications