சாத்தான்குளம்: இனி ஒரு நொடியும் வீணாக்கக் கூடாது.. தடயங்களை அழிக்கக் கூடும்.. நீதிபதிகள் காட்டம்
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த சம்பவத்தில் இனி ஒரு நொடியும் வீணாக்கக் கூடாது. சிபிஐ விசாரிக்கும் முன் தடயங்கள் அழிக்க வாய்ப்புள்ளது என சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19-ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாக்டவுன் நேரத்தை விட கூடுதலாக கடைத் திறந்து வைத்திருந்ததுதான் அவர்கள் மீது சொல்லப்படும் புகாராக இருக்கிறது. இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.

அவமதிப்பு
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்ற மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அவரை ஒருமையில் விமர்சித்ததாக புகார் அளித்திருந்தார். இதன் பேரில் காவலர் மகாராஜன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காயங்கள்
இந்த வழக்கு விசாரணைக்கு மேற்கண்ட மூவரும் ஆஜரானார்கள். அப்போது முதல் நிலை பிரேத பரிசோதனை அறிக்கை, நீதித்துறை நடுவரின் அறிக்கை ஆகியவற்றை படித்து நீதிபதிகள் பார்த்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடல்களில் அதிக காயங்கள் உள்ளன. இதனால் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது.

தடயங்கள்
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி கிடைக்கும் என அவரது குடும்பத்தினர் நம்புகிறார்கள். இனி ஒரு நொடியும் வீணாக்கக்கூடாது. சிபிஐ விசாரணை தொடங்கும் தொடங்கும் வரை நெல்லை டிஐஜி அல்லது சிபிசிஐடி உடனே விசாரிக்க முடியுமா. இதுகுறித்து 12 மணிக்கு பதிலளிக்க வேண்டும். சிபிஐ விசாரணை தொடங்கும் முன் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது.

காலஅவகாசம்
ஒரு மாஜிஸ்திரேட்டை போலீஸார் ஒருமையில் விமர்சித்தது அதிர்ச்சியை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறினர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், போலீஸாரின் செயல்பாடுகளுக்கு மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் ஏஎஸ்பி, டிஎஸ்பி, காவலர் பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. காவலர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏஎஸ்பி குமாரும், டிஎஸ்பி பிரதாபனும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications