மதுக்கடையில் கூடிய மதுரையன்ஸ்.. ஒரே நாளில் அதிக வருமானம்.. டாஸ்மாக் வசூலில் சாதனை.. முழு லிஸ்ட்!
தமிழகத்தில் நேற்று மற்ற மாவட்டங்களை விட மதுரையில்தான் மிக அதிகமாக டாஸ்மாக் வசூல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
மதுரை: தமிழகத்தில் நேற்று மற்ற மாவட்டங்களை விட மதுரையில்தான் மிக அதிகமாக டாஸ்மாக் வசூல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாள் டாஸ்மாக் வருமானம் 170 கோடி ரூபாய் என்று டாஸ்மாக் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்ததை விட இது அதிக வருமானம் என்று கூறுகிறார்கள்.தமிழகத்தில் நேற்று அனைத்து மண்டலங்களிலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
40 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் இப்படி டாஸ்மாக் திறக்கப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம்
நேற்று மக்கள் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கினார்கள். மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட்டமாக சென்று மது வாங்கினார்கள். இப்படி பலர் கூட்டமாக சென்றதால் சில இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூட முடியவில்லை. தமிழகத்தில் மொத்தம் 5146 டாஸ்மாக் கடைகள் உள்ளது. ஆனால் நேற்று வெறும் 3750 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது.

மதுரை நிலை
அதிகபட்சமாக மதுரையில் ரூ. 45.67 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் தற்போது 112 பேருக்கு கொரோனா உள்ளது. ஆனால் அதையும் மீறி மதுரையில் அதிக அளவில் மக்கள் மது வாங்கி உள்ளனர். பொதுவாக பண்டிகை நாட்களில் சென்னையில் அதிகமாக மது விற்பனை ஆகும். மதுரை இரண்டாம் இடம் பிடிக்கும். சென்னையில் இந்த முறை மது விற்பனை இல்லாததால் மதுரை முதல் இடம் பிடித்துள்ளது.

சென்னைக்கு வெளியே
மதுரைக்கு அடுத்து சென்னைக்கு வெளியில் புறநகர் பகுதியில் ரூ.42 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது செங்கல்பட்டில் வரும் பகுதிகளில் மட்டும் இத்தனை கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்து இங்கு மக்கள் தொகை அதிக அளவில் உள்ளது. இதனால் இங்கு விற்பனை அதிகம் உள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சேலம் நிலை
சேலம் மண்டலத்தில் ரூ.41 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பெரிய நகரங்களில் எல்லாம் அதிக அளவில் மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. பண்டிகை அல்லாத ஒரு நாளில் இவ்வளவு பெரிய வசூல் வருவது இதுவே முதல்முறையாகும். தமிழகத்தில் இது புது ரெக்கார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications