ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தை என்ன பண்ணி வச்சிருக்கீங்க? ரயில்வே துறையிடம் விளக்கம் கேட்ட சு.வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை மறு சீரமைக்கும் விதமாக புதிய பாலம் கட்டப்பட்டது. ஆனால் இதன் தரம் கேள்விக்குறியாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருப்பதாகவும், பாலத்தின் உறுதி குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ரயில்வே துறைக்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

தென்னியாவின் பொறியியல் அதிசயமாக பாம்பன் பாலம் இருந்து வந்தது. ஆனால் இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் தற்போது சேதமடைந்து இருந்தது. எனவே, மாற்று பாலத்தை கட்டும் பணியில் ரயில்வே துறை தீவிரமாக இறங்கியது. பாலம் ஒருவழியாக கட்டி முடிக்கப்பட்டு சோதனை ரயிலும் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று ரயில்வே துறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்திருந்தனர். இந்த ஆய்வில் பாலத்தின் தரம் குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன. இதனை சுட்டிக்காட்டி, ரயில்வே துறையிடம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

pamban bridge su venkatesan

தனது x தளத்தில், "பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாம்பன் பாலம். இரயில்வே துறையின் ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பான RDSO வின் ஒப்புதல் இல்லாமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பின்னணி என்ன? இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள மோசடி குறித்து ரயில்வே அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் .

பாம்பன் பாலம் 1914 இல் கட்டப்பட்டது. அது அன்றையக் காலத்தில் ஒரு பொறியியல் அதிசயமாகும். அதற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்தில் நடந்துள்ள மோசடியை இரயில்வே பாதுகாப்பு ஆணையரே கடுமையாக விமர்சித்துள்ளார்.

உதாரணமாக தூக்குப்பாலப் பகுதி ரயில்வேயில் ஆராய்ச்சி வடிவம் மற்றும் தர நிர்ணய அமைப்பின் (RDSO) எந்தவிதமான ஒப்புதலும் இல்லாமல் வேறு வடிவமைப்பு விதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ரயில்வே வாரியத்தின் ஆதரவோடு ஆர் டி எஸ் ஓ தன் கடமையை கைவிட்டுள்ளது வேதனையாகும் என்று அவர் சுட்டிக் காட்டி உள்ளார். இப்படிப்பட்ட முக்கியமான பாலம் கட்ட தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சி, வடிவம் மற்றும் தரநிர்ணய அமைப்பை (RDSO) இதில் ஈடுபடுத்த வேண்டாம் என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்தக் காரணத்தால் தொழில்நுட்பக் குழுவை அமைக்க வில்லை . ரயில்வே வாரியம் தனது சொந்த நடைமுறை விதிகளை மீறுவது மிகவும் ஆபத்தானது துரதிஷ்டமானது என்று ஆணையர் கண்டித்துள்ளார்.

அது மட்டுமல்ல பாலத்திற்கான இரும்பு படிமங்கள் கூட ஆர் டி எஸ் ஓ வை கலந்தாலோசிக்காமல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் மோசமானது. எல்லாம் முடிந்த பிறகு தெற்கு ரயில்வே தலைமை பொறியியல் அதிகாரியின் ஒப்புதலை ஆணையம் சுட்டிக் காட்டிய பின் 18. 10. 24 இல் பெற்றுள்ளனர்.

இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தை பாதுகாப்பு விதிகளை புறக்கணித்துக் கட்டியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பாம்பன் பாலம் கடல்நீரின் ஈரப்பதத்திற்கும், காற்றின் தாக்கத்திற்கும், ரயிலின் வேகத்திற்கும் ஈடுகொடுக்கும் வகையில் கட்டப்பட வேண்டிய கட்டுமான தொழில்நுட்பமாகும். இதை அலட்சியப்படுத்துவது அந்த வழித்தடத்தில் தினந்தோறும் பயணிக்க உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்துவதாகும். ரயில்வே அமைச்சகம் எப்படி இதற்கு அனுமதியளித்தது என்பதை அமைச்சர் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்" என வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+