களமிறங்கிய CRPF.. திருப்பரங்குன்றத்தை கண்ட்ரோல் எடுத்த தமிழக போலீஸ்.. 2 படையில் யாருக்கு அதிக பவர்?
சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் அங்கே தீபம் ஏற்றப்படாமல் போனதால் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
இன்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு விசாரிக்கப்பட்டது. தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போலீசார் உடன் தள்ளு முள்ளு செய்தனர். போலீசார் காயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளை தூக்கி எறியும் போது, காவலர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் கட்டுப்பாடு - CRPF களமிறக்கப்பட்டது
போலீசாரின் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம் மலை கொண்டு வரப்பட்ட நிலையில் மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்பு படையினருடன் சென்று, இந்து அமைப்பினர் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து அங்கே பதற்றம் அதிகரித்ததால் போலீஸ் குவிக்கப்பட்டது. மொத்த மலையையும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இன்னொரு பக்கம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள கார்த்திகை தீபம் ஏற்ற சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் 50 பேருடன் மனுதாரரான இந்து மக்கள் கட்சி தரப்பு புறப்பட்டனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.
யாருக்கு அதிகாரம் அதிகம்
இந்த இடத்தில்தான் போலீஸ் - CRPF இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளது. CRPF அதிகாரிகளுக்கு போலீஸ் அனுமதி தரவில்லை. யாருக்கு இதில் அதிகாரம் அதிகம் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு மாநிலத்திற்குள் மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) இவற்றில் யார் அதிகாரம் மிக்கவர்கள் விவகாரமே கொஞ்சம் சிக்கலானது. இரு படைகளுக்கும் தனித்தனியான வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் உண்டு. மாநில காவல்துறை, மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றச் சட்ட அமலாக்கத்திற்கு முழு அதிகாரம் கொண்டது.
மத்திய ஆயுதப்படையான CRPF, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. கலவரக் கட்டுப்பாடு, தேர்தல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்பு போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக மட்டுமே மாநிலங்களில் நிறுத்தப்படுகிறது. இது மாநில நிர்வாகத்திற்குத் துணை புரியுமே தவிர, அதன் அதிகாரத்திற்கு மாற்றாகச் செயல்படாது.
சாதாரண சட்டம் ஒழுங்கு சூழ்நிலைகளில், மாநில காவல்துறைக்கே முதன்மை அதிகாரம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டிற்குத் தனியாக அதிகாரம் வழங்கப்பட்டால் அன்றி, CRPF-க்கு தனியாக காவல்துறை அதிகாரங்கள் கிடையாது.
காவல்துறை சட்டப்படி ஒரு CRPF வீரரை கைது செய்யலாம்
மாநில காவல்துறை சட்டப்படி ஒரு CRPF வீரரை கைது செய்ய முடியும்; அவர்களுக்கு கைது செய்வதிலிருந்து எந்த விலக்கும் இல்லை. இருப்பினும், நடைமுறை சற்று சிறப்புடையது. காவல்துறை உடனடியாக CRPF அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும், கைது பெரும்பாலும் அவர்களின் கமாண்டுடன் ஒருங்கிணைந்து செய்யப்படுகிறது. பிரிவு 197 CrPC-இன் கீழ் பணிநேரத்தில் நடந்த செயல்களுக்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படலாம். மோதலைத் தவிர்த்து இரு படைகளுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு அவசியம் என பழைய முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகள் வலியுறுத்துகின்றன.
நடைமுறையில், சட்டம் ஒழுங்குக்கான முழு அதிகாரம் மாநில காவல்துறையிடமே உள்ளது. CRPF-க்கு அவர்கள் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட பணிகளுக்கான செயல்பாட்டு அதிகாரம் மட்டுமே உண்டு. படைகளுக்கு இடையேயான மோதலைத் தவிர்க்க, CRPF வீரர்கள் மீதான கைதுகள் அல்லது நடவடிக்கைகள் மிக அரிதானவை. இவை உயர் நிர்வாக மட்டங்களிலேயே கவனமாகக் கையாளப்படுகின்றன.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’












Click it and Unblock the Notifications