Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரேமலதா மட்டும் மிஸ்ஸிங்.. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மேடையேறிய ஸ்டாலின்.. செய்துகாட்டிய கமல்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் கமல் பண்பாட்டு மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள அத்தனைக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது விவாதமாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் மிஸ்ஸாகி இருக்கிறார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றன. அந்த வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் கமல் பண்பாட்டு மையம் சார்பாக மறவோம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காந்தியை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

DMK

திமுக கூட்டணி

அதுமட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றார்.

பிரேமலதா மட்டும் மிஸ்ஸிங்

அதேபோல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் மேடையேறினர். இந்தக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மட்டும் பங்கேற்கவில்லை.

ஸ்டாலின் பேச்சு

இதன் மூலமாக திமுக தலைமையிலான கூட்டணி இணக்கமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், முரசொலி பவளவிழாவில் கமல்ஹாசன் ஆற்றிய உரை என்னால் மறக்க முடியாதது. காந்தி பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, இந்தியாவுக்கு காந்தி நாடு என்று பெயர் சூட்டக் கோரியவர் பெரியார்.

பாஜகவின் வெறுப்பு என்ஜின்

காந்தியின் அடையாளமே இருக்கக் கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. ரூபாய் நோட்டில் இருந்தும் காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்யும் அற்பர்களுக்கு காந்தியை பிடிப்பது இல்லை. மதவெறி புகுந்தால் முதலில் மரணிப்பது மனிதம்தான். பாஜக வெறுப்பு என்ஜின்கள் தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை.

அன்பின் பாதையை மறவோம்

பெரியாரின் சமூகநீதி பார்வைதான் தேவை. கமல்ஹாசன் பேசுவது புரியவில்லை என சிலர் சொல்கிறார்கள். கமல்ஹாசன் பேசுவது புரியாமல் இல்லை. அவர்கள் புரிந்து கொள்ள விரும்பவில்லை. மீடியா மைக்குகளில் புலம்பியவர்களை நாடாளுமன்ற மைக்குகளிலும் சிலரை கமல்ஹாசன் புலம்ப வைத்துவிட்டார். அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+