Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடிதத்திற்கு கை மேல் பலன்! மதுரை மாணவனுக்கு நீதி கிடைத்தது! தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்த மதுரை மாணவனுக்கு லட்சத்தீவில் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் சு.வெங்கடேசன் எம்.பி.மேற்கொண்ட முயற்சியால் தேர்வு மையம் மதுரைக்கே மாற்றப்பட்டுள்ளது.

இதனை நீதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

வெங்கடேசன் எம்.பி கடிதம்

வெங்கடேசன் எம்.பி கடிதம்

மத்தியப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர மதுரையை சேர்ந்த மானவன் லோகேஷ்வர் விண்ணப்பித்திருந்தார். தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்துள்ளது. தனக்கு வந்த கடிதத்தை பிரித்துப் பார்த்தால் தேர்வு மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி காத்திருந்தது.

கை மேல் பலன்

கை மேல் பலன்

இதையடுத்து மாணவன் லோகேஷ்வரின் தந்தை தந்தை பதறிப் போய் நேரடியாக சு.வெங்கடேசன் எம்.பியை நாடி நடந்த விவரத்தை கூறினார். அவரை பதற்றம் அடைய வேண்டாம் என ஆசுவாசப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி. மத்திய அரசுக்கு தாமதிக்காமல் கடிதம் எழுதியதோடு பேச வேண்டிய இடத்தில் தாமதிமின்றி பேசினார். அவரது முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

முன் மாதிரி எம்.பி.

முன் மாதிரி எம்.பி.

ஆம், மாணவன் லோகேஷ்வருக்கு லட்சத்தீவில் இருந்து சொந்த ஊரான மதுரையிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மட்டும் இந்த விவகாரத்தில் சற்று கவனக் குறைவாகவோ மெத்தனமாகவோ இருந்திருந்தால் பரிதாபமாக நுழைவுத் தேர்வே எழுத முடியாத நிலை மாணவர் லோகேஷ்வருக்கு ஏற்பட்டிருக்கும். ஆனால் தனது துரித நடவடிக்கையால் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.

நன்றி நன்றி

நன்றி நன்றி

ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் இவரை போல் இருந்துவிட்டால் சாமானியர்களுக்கான உரிமை நிலைநாட்டப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி. நீதி கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளதுடன்,தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளருக்கும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+