உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க துரோகிகளுக்கு எதிராக வாக்களியுங்கள்... டிடிவி தினகரன் பேச்சு
மதுரை: துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றும் டிடிவி தினகரன் பதிலளித்தார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மக்களிடம் கேட்டதை தான் இப்போதும் கேட்கிறேன் என்றும், பழனிசாமி - பன்னீர்செல்வத்தின் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் எனவும் பேசினார்.

ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. ரகசிய கூட்டுக்கு வாய்பே இல்லை என்பதற்கு தான் இதனை சொல்வதாகவும் தெரிவித்தார்.
வாக்குக்கு பணம் கொடுப்பதாலேயே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற சரித்திரம் இதுவரை கிடையாது. இனிமேலும் வாக்களிக்க மாட்டார்கள் என்று பேசிய டிடிவி தினகரன் எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் புண்படுத்துவதுப்போல யார் பேசினாலும் அது தவறு என்றார்.
முன்னதாக, இளைஞர் பட்டாளம் திமுக வில் இல்லை என்றும், வயது முதிர்ந்தவர்களின் இயக்கமாக தி.மு.க. ஆகி விட்டது என்றும் டிடிவி தினகரன் விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications