விடைபெறுகிறது பல வருட மதுரை டிராபிக்! நாளை ஸ்டாலின் திறக்கும் மெகா மேம்பாலம்.. ஒரு சர்ப்ரைஸ் இருக்கு
மதுரை: மதுரை நகரின் நீண்ட நாள் போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், மதுரை - தொண்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேலமடை மேம்பாலம் நாளை, டிசம்பர் 7ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நடைபெறும் விழாவில் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்காக இன்றைய தினம் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார் ஸ்டாலின்.
தென் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை சுற்றுச்சாலையை கடந்து நகருக்குள் நுழையும்போது, குறிப்பாக தொண்டி சாலை மற்றும் கோரிப்பாளையம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

பஸ்கள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்துமே அங்கு பல மணிநேரங்கள் நின்று செல்ல வேண்டிய நிலைமை இருந்தது.. இதனால் ஏகப்பட்ட நெரிசலும் ஏற்பட்டது..
இந்த நெரிசலை குறைக்கும் நோக்கில்தான், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மதுரையில் புதிய மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படும் என்று நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
மதுரை டிராபிக்குக்கு தீர்வு
அதன்படி, 2023 அக்டோபர் 30ல், மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கோரிப்பாளையம் சந்திப்பில் புதிய மேம்பாலங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, தொண்டி சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், ஆவின் சந்திப்பு மற்றும் அப்பல்லோ சந்திப்பு பகுதிகளில் இருந்த போக்குவரத்து சிக்னல்கள் அகற்றப்பட்டு, ரவுண்டானாவுடன் கூடிய மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த மேம்பாலம் 30 தூண்களுடன், சுமார் 1,100 மீட்டர் நீளமும், 17.2 மீட்டர் அகலமும் கொண்டு நான்கு வழிச்சாலையாக ரூ.150.28 கோடி செலவில் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இப்போது மொத்த பணிகளும் முடிவடைந்து விட்டன.. .
மேம்பாலத்திற்கு வண்ணம் பூசும் பணிகள், மின் விளக்குகள் பொருத்துதல், அணுகுசாலைகள் அமைத்தல், தார்சாலை பணி ஆகியவைம் நிறைவு பெற்றுவிட்டன.. அதுமட்டுமல்ல, மேம்பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களில் செடிகள் நடுவதற்கான மூன்று வடிவமைப்பு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
நாளை திறக்கப்படும் மேம்பாலம்
இதற்கிடையில், ஆவின் சந்திப்பு மற்றும் அண்ணா பேருந்து நிலையம் சந்திப்பிலும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் தற்போது முடிவடைந்துள்ளன. இதனால், இந்த பகுதியின் மொத்த போக்குவரத்து இயக்கம் மேலும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பல்லோ சந்திப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நான்கு வழிச்சாலை மேம்பாலம் 2.1 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தில் அமைந்துள்ளது. ரூ.150 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, தற்போது விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகளும் ஜரூராய் நடந்து முடித்துவிட்டது.
இதையடுத்து, நாளை அதாவது டிசம்பர் 7ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலன்கள் - பயன்கள்
இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் பஸ்கள், லாரிகள், தனியார் வாகனங்கள், தினசரி பயணிகள் அனைவரது பயண நேரமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.. குறிப்பாக அப்பல்லோ சந்திப்பு பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கடும் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும் என்று தெரிகிறது.
அந்தவகையில், இந்த பிரம்மாண்டப் பாலம், தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்குள் நுழையும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரப் போகிறது.
இந்த மேம்பாலத்தை நாளைய தினம் முதல்வர் திறந்து வைக்கிறார்..
திருப்பரங்குன்றம் பரபரப்பு
கடந்த 4 நாட்களாகவே திருப்பரங்குன்றம் விவகாரம் தீயாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. மதுரை ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீலுக்கு போயுள்ளது.. மதுரை உயர் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு மதுரை செல்கிறார்.
நாளை இந்த மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்... மேலும், அங்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை திமுகவினரும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications