கிராம நத்தம் நிலம்.. ஆதி திராவிடருக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வருவாய் துறைக்கு தமிழக அரசின் அதிரடி
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டு வருகிறது... இது தொடர்பாக எண்ணற்ற வழக்குகளை தமிழக நீதிமன்றங்கள் நடத்தியிருக்கின்றன.

பட்டாக்கள்: குறிப்பாக, கடந்த 1998-ம் ஆண்டு ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த வீடுகள் இல்லாத 91 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அரசால் வழங்கப்பட்டன.
அப்படி தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களில் இதுவரை யாரும் வீடுகள் கட்டாததால், இலவச வீட்டு மனைகளை திரும்ப பெற்று அரசின் நல திட்டங்களுக்கு பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நாராயணசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
தனி நீதிபதி உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "இலவசமாக கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை திரும்ப பெற உத்தரவிட முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தொடரப்பட்டது.
இது தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, "பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டாமல் இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. பட்டாவை திரும்ப பெற்றால் அரசின் நோக்கம் பாதிக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கியதால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை" என்று தெரிவித்த நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தனர்.
வீட்டு மனைகள்: அதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் வருவாய் அலுவலர்கள் இடம்பெற்ற குழு அமைக்கும்படியும், அந்த குழு வீட்டுமனைகளை 100 சதவீதம் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.. இதற்கான சுற்றறிக்கையை வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து தாசில்தார்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த பணியில் தாசில்தார்கள், 50 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நல அலுவலரான தனி தாசில்தார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி தாசில்தார் ஆகியோர் மீதியுள்ள 50 சதவீத ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை தாசில்தார்கள் ஆகியோரைக் கொண்டதாக குழு அமைக்கப்பட வேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளார்.
நத்தம் மனைகள்: மதுரை வருவாய் கோட்டத்தில், ஆதிதிராவிடர் நத்தத்தில் 618 காலிமனைகள், பிற்படுத்தப்பட்டோர் நத்தத்தில் 40 காலிமனைகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதால், இதனை மீண்டும் ஆய்வு செய்து வழங்க உள்ளனர். இதுபற்றி கடந்த செப்டம்பர் 9ம் தேதி, மதுரையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளனர். அதனடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications