Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிராம நத்தம் நிலம்.. ஆதி திராவிடருக்கு இலவச வீட்டுமனை பட்டா.. வருவாய் துறைக்கு தமிழக அரசின் அதிரடி

Subscribe to Oneindia Tamil
மதுரை: தமிழகத்தில் ஆதி திராவிடர்களுக்கான காலிமனைகளை கண்டறிந்து, தகுதியானவர்களை தேர்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வழங்கப்பட்டுள்ள புதிய உத்தரவுகள் என்னென்ன?

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டு வருகிறது... இது தொடர்பாக எண்ணற்ற வழக்குகளை தமிழக நீதிமன்றங்கள் நடத்தியிருக்கின்றன.

grama natham land free housing land patta


பட்டாக்கள்: குறிப்பாக, கடந்த 1998-ம் ஆண்டு ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த வீடுகள் இல்லாத 91 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் அரசால் வழங்கப்பட்டன.

அப்படி தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களில் இதுவரை யாரும் வீடுகள் கட்டாததால், இலவச வீட்டு மனைகளை திரும்ப பெற்று அரசின் நல திட்டங்களுக்கு பயன்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என நாராயணசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தனி நீதிபதி உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, "இலவசமாக கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை திரும்ப பெற உத்தரவிட முடியாது" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தொடரப்பட்டது.

இது தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, "பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வீடுகள் கட்டாமல் இருக்கலாம், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவே இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. பட்டாவை திரும்ப பெற்றால் அரசின் நோக்கம் பாதிக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கியதால் மனுதாரர் பாதிக்கப்படவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை" என்று தெரிவித்த நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா அரசால் வழங்கப்பட்டு வரும்நிலையில், ஏற்கனவே தயார் செய்து ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படாமல் விடுபட்டுப் போன வீட்டுமனை பட்டாக்களும் உள்ளன.. இவைகளை மறுபடியும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கும் வகையில், ஆய்வு செய்ய அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு மனைகள்: அதற்காக ஒவ்வொரு தாலுகாவிலும் வருவாய் அலுவலர்கள் இடம்பெற்ற குழு அமைக்கும்படியும், அந்த குழு வீட்டுமனைகளை 100 சதவீதம் கள ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.. இதற்கான சுற்றறிக்கையை வருவாய் கோட்டாட்சியர்கள், அனைத்து தாசில்தார்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த பணியில் தாசில்தார்கள், 50 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நல அலுவலரான தனி தாசில்தார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தனி தாசில்தார் ஆகியோர் மீதியுள்ள 50 சதவீத ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை தாசில்தார்கள் ஆகியோரைக் கொண்டதாக குழு அமைக்கப்பட வேண்டும்" என்றும் உத்தரவிட்டுள்ளார்.

நத்தம் மனைகள்: மதுரை வருவாய் கோட்டத்தில், ஆதிதிராவிடர் நத்தத்தில் 618 காலிமனைகள், பிற்படுத்தப்பட்டோர் நத்தத்தில் 40 காலிமனைகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதால், இதனை மீண்டும் ஆய்வு செய்து வழங்க உள்ளனர். இதுபற்றி கடந்த செப்டம்பர் 9ம் தேதி, மதுரையில் துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை செய்துள்ளனர். அதனடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+