கிளிகளை வீட்டில் வளர்க்காதீர்கள்.. உடனே ஒப்படையுங்கள்.. மதுரையில் வனத்துறையினர் உத்தரவு
மதுரை: வீடுகளில் கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற ஜூலை 17 ஆம் தேதிக்குள் கிளிகளை மதுரை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடு வீடாக வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கிளிகளை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மதுரை மாநகர் பகுதியான செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் வீடுகளில் ஏராளமான கிளிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் கிளிகள் துன்புறுத்தப்படுவதாகவும், கிளிகளுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல், கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து செல்லூர் பகுதியிலும் நரிமேடு பகுதியிலும் வனத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 100க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோன்று வீட்டில் கிளி வளர்ப்பு செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற ஜூலை 17 ஆம் தேதிக்குள் கிளிகளை வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்தை மீறி கிளிகளை வீடுகளில் வளர்க்கும்பட்சத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வனத்துறை சார்பாக துண்டு பிரசாரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications