இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் நிரம்பிய மதுரை சாலைகள்
மதுரை மாவட்டத்தில் வெயில் சுள்ளென்று சுட்டெரித்த நிலையில் வானிலை மையம் கணித்தது போலவே புதன்கிழமை மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. சாலையில் பெருகிய வெள்ள நீரில் வாகனங்கள் மிதந்து சென்றன.
மதுரை: சாரல் மழையோடு தொடங்கிய மாலை நேரத்தில் போகப்போக சூறாவளிக்காற்றுடன் கனமழையாக கொட்டியது. கூடவே இடியும் மின்னலும் சேர்ந்து கொண்டது. 2 மணிநேரம் பெய்த மழையால் மதுரைவாசிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து மின்தடையும் ஏற்படவே சில மணிநேரங்கள் இருளில் தவித்து போய்விட்டனர் என்றாலும் கூலான கிளைமேட் காலை முதல் சுட்டெரித்த சூரிய வெப்பத்திற்கு இதமாக மாற்றியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்களையும் தத்தளிக்க வைத்து விட்டது.
அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் மாநிலம் முழுவதும் அதிகமாகவே இருக்கிறது. தென்மேற்குப் பருவமழை அவ்வப்போது பெய்தாலும் வெப்பம் தனிந்தபாடில்லை. கொரோனா வைரஸ் கொத்துக்கொத்தாக பரவி வருவதால் லாக் டவுன் காலத்தில் வெளியே நடமாட்டம் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள் மக்கள் என்றாலும் புழுக்கம் அதிகரிக்கவே ஏசி, மின்சாதனங்களின் பயன்பாடும் அதிகரிக்கிறது. கரண்ட் பில்லை பார்த்தால் பலருக்கும் மயக்கமே வந்து விடுகிறது. இத்தனைக்கும் ஆறுதலாக இருப்பது அவ்வப்போது பெய்யும் மழைதான்.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சூரியன் சுட்டெரித்து வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் சாரலாக மழை தொடங்கி இடியும் மின்னலுமாக கனமழை கொட்டித் தீர்த்தது.

மதுரை நகரிலும் கோ.புதூர், டிஆர்ஓ காலனி,மாட்டுத்தாவணி, தல்லாக்குளம் போன்ற பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருப்பரங்குன்றம், பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம் என நகரின் முக்கிய பகுதிகளில் பெய்த மழையால் வெள்ள நீர் தேங்கியது.
மதுரையில் நேற்று அதிகபட்சமாக 8 செமீ மழை பதிவாகியுள்ளது. இதே போல மாவட்டத்தில் விமான நிலையம், சிட்டாம்பட்டி, மேலூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, குன்னத்தூர்,பேரையூர் உள்ளிட்ட பல பகுதிகளும் பலமணிநேரம் நின்று பெய்தது. வெப்பம் வாட்டிய நிலையில் கொட்டித்தீர்த்த மழையால் புழுக்கம் நீங்கி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications