Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சரவையிலிருந்து மனோ தங்கராஜ் நீக்கம் ஏன்? வழக்கறிஞருக்கு வந்த சந்தேகத்தை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

மதுரை: பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தால்தான் மனோ தங்கராஜ் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அமைச்சரவை நேற்று மாற்றப்பட்டது. இதில் 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். 4 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். சிலரது இலாகாக்கள் மாறின. மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர். இவர்களில் ராமசந்திரனுக்கு அரசு கொறடா பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

mano thangaraj tamil nadu cabinet

அரசு கொறடா பதவியை வகித்து வந்த கோவி செழியனுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான்.

அவருடைய குடும்பத்தினர் தலையீடு இருந்ததாக பல முறை புகார் எழுந்தது. கள்ளச்சாராயம் காய்ச்சிய கும்பலின் தலைவனுடன் அவர் கட்டி அணைத்து புகைப்படம் எடுத்தது பெரும் சர்ச்சையானது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தையே செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் கட்டுக்குள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இது சீனியர் அமைச்சர் பொன்முடிக்கு பெரும் தொல்லையாகவே இருந்தது. இதனால் திமுக நிர்வாகிகள் தரப்பு புகார் சொன்னதும் இல்லாமல் பொன்முடியும், செஞ்சி மஸ்தான் மீது புகார் கூறியதாக தெரிகிறது. இதனால்தான் அவர் நீக்கப்பட்டார்.

ஆனால் மனோ தங்கராஜை பொருத்தமட்டில் ஆவடி எம்எல்ஏ எஸ்.எம்.நாசருக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். அவருடைய மாற்றம் ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஆவின் பால் தட்டுப்பாடு, ஆவின் பாலில் கலப்படம் உள்ளிட்ட விவகாரங்களால்தான் இந்த நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பாஜக கொடுத்த அழுத்தம்தான் மனோ தங்கராஜ் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: மனோ தங்கராஜை அமைச்சரவையில் இருந்து நீக்கியது முற்போக்காளர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.

குமரி ஆர்எஸ்எஸ் மாடல் என்பதை விட திராவிட மாடலாக மாற்றியவர் மனோதான். மோடிக்கு எதிராக 108 கேள்விகள் என்ற புத்தகத்தை எழுதியவர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர். ஆவினில் ஊழலை ஒழித்தார். மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியிலும் விளவங்கோடு இடைத்தேர்தலிலும் காங்கிரஸை வெற்றி பெறச் செய்தவர்.

அவர் செய்த தவறு என்ன என்பதை முதல்வர் விளக்க வேண்டும். கன்னியாகுமரி, நெல்லை பகுதியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்வதை எதிர்த்து பெரும்பான்மையான குவாரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

எனவே பாஜகவினரும் கனிமவள கொள்ளையர்கள் கொடுத்த அழுத்தத்தால்தான் மனோ தங்கராஜ் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்க்கும் கொள்கையாளர், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக இருப்பவரை நீக்குவதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்.

மதுரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை டம்மியாக்கிவிட்டார்கள். தற்போது மனோ தங்கராஜும் நீக்கப்பட்டுவிட்டார். கொள்கை ரீதியாக இருப்போருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடாது என திமுக விரும்புகிறதா, முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகே இது நடப்பதால் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன? நாடார் சமூகத்தின் பிரதிநிதித்துவம் தேவையில்லை என திமுக கருதுகிறதா?

பாஜகவோடு திமுக நெருக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. மனோ தங்கராஜை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும். கொள்கைவாதிகளை நீக்குவது குறித்து மூத்த அமைச்சர்கள், முற்போக்கு அமைப்பாளர்களான கி.வீரமணி, திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் கேள்வி எழுப்ப வேண்டும் என வாஞ்சிநாதன் கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+