Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரசாயனம் கலந்த விநாயகர் சிலை.. “எப்படி நடக்குது? உடனே சொல்லுங்க”.. ஐகோர்ட் கிளை பரபர ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: ரசாயனம் கலந்த விநாயகர் சிலை செய்ய கரைக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றி சிலை செய்யப்படுகிறதா என கேள்வி எழுப்பி, அரசிடம் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொதுமக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

High court order in the case seeking ban on Chemical added vinayagar idols

இந்நிலையில், ரசாயனத்தால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சரியாக கரைவதில்லை மற்றும் அதனால் மாசுபாடு ஏற்படுவதால், களிமண் சிலைகளை மட்டுமே செய்ய உத்தரவு அளிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசுபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்த நிலையில், விநாயகர் சிலைகளை ரசாயனம் பயன்படுத்தி செய்யக்கூடாது என பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

விநாயகர் சிலையை செய்வதற்கு, பசுமைத் தீர்ப்பாயம், மாசு கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அரசு தரப்பில் தகவல் பெற்று நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+