"மதுரை மாநகராட்சியை மொத்தமாக கலைக்க உத்தரவிட நேரிடும்”.. உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை!
மதுரை: மதுரை மாநகராட்சியை கலைக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து 3 கூட்டங்கள் நடத்தப்படவில்லை என்றால் மாநகராட்சி சட்ட விதிகளின்படி மதுரை மாநகராட்சியை கலைக்க உத்தரவிட நேரிடும் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாநகராட்சி மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போது வரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் 2 பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர்.

அதன் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 9 ஆம் தேதி பொன் வசந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அக்டோபர் 15-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரான இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா அக்டோபர் 17 ஆம் தேதி மாமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா செய்து 3 மாதங்கள் ஆகியும் மதுரை மாநகராட்சியின் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 இடங்களில் 69 இடங்கள் திமுக. வசமே இருக்கும் நிலையிலும், சுமார் 3 மாதங்களாக புதிய மேயர் நியமிக்கப்படாதது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த டிஆர்.தேசிகாச்சாரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சியின் மேயராக இருந்த இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அதனால் மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜெயசந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மதுரை மாநகராட்சியில் மேயர் என யாரும் இல்லையெனில் மாதந்தோறும் துணை மேயர் தலைமையில் மாமன்ற கூட்டம் நடத்த வேண்டும் என்றனர். துணை மேயரும் இல்லை என்றால் யாராவது ஓர் உறுப்பினரை தலைவராக வைத்து கூட்டம் நடத்தலாம் என்றும் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு கூட்டங்கள் நடத்தவில்லை என்றால் மாநகராட்சியை கலைக்க வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், கூட்டம் நடத்தப்படவில்லை என்றால் உறுப்பினர்களை கலைக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் மேயர் பதவி விலகிய பிறகு சாதாரண கூட்டம் நடைபெற்றதா என்பது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications